“உன்னால் முடிந்தவரை மிகப்பெரிய மனிதர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்” என்று மகனிடம் சொன்னார் தந்தை. “அவர்கள் தொடர்பால் நான் நல்ல வாய்ப்புகளைப் பெறுவதற்காக சொல்கிறீர்களா?” என்றான் மகன். “இல்லை! அவர்கள் எளிமையாகவும்
இனிமையாகவும் பரிவாகவும் உன்னிடம் பழகுவார்கள். அதைப் பார்த்து, அவர்கள் எப்படி பெரிய மனிதர்கள் ஆனார்கள் என்று உனக்குப்புரியும்” என்றார் தந்தை.
Leave a Reply