வாழ்வில் பலவித இன்னல்களுக்கு ஆளான இளைஞன் தீர்வுகள் கேட்டு தெய்வத்திடம் முறையிட்டான். விடைகள் கிடைத்தபாடில்லை. தன் குருவிடம் முறையிட்டான். குரு ஏதோ பதில் சொன்னார். காதில் விழவில்லை, நெருங்கி அமர்ந்தான். குரு மீண்டும் ஏதோ சொன்னார். காதில் விழவில்லை, இன்னும்
நெருங்கினான். குரு மறுபடியும் சொன்னார். இம்முறை காதில் விழுந்தது. “கடவுள் சில சமயம் தீர்வுகளை முணுமுணுப்பார். கூர்ந்து கவனி”. பதட்டமின்றி வாழ்வை உற்றுப் பார்த்தான். வெற்றிகள் சேர்த்தான்.
Leave a Reply