கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

சிறிய

வயதில் தந்தையை இழந்தான் அவன். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பெரியவர் தந்தைபோல் அரவணைத்து வழிகாட்டினார். இளைஞனாக வளர்ந்தபோது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடன் இருந்தான். அவனது நடுத்தர வயதில் நல்ல நிலையை எட்டியபோது வேறொரு நாட்டில் குடியேறினான். அவர் மரணப்படுக்கையில் இருப்பதாய் செய்தி. சென்று பார்க்க நேரமில்லையென்று வருந்தினான். தன் சொத்தின் பெரும்பகுதியை அந்த முதியவர் அவனுக்கு எழுதிவைத்த ஆவணம் கூரியரில் வந்தது. கூடவே ஒரு குறிப்பு…. “எனக்காக நீ செலவழித்த நேரங்களுக்கு ஒரு சிறிய காணிக்கை இது” என்று. தகுந்தவர்களுக்குத் தருகிற நேரம் விலைமதிப்பற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *