டாடா நிறுவனங்களில் ஒன்றாகிய நெல்கோவின் சீரமைப்புக்காக நாசிக் நோக்கி, முதுநிலை மேலாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார் ரத்தன் டாடா. வழியில் காரின் சக்கரம் பழுதடைந்தது. இந்தச் சிறு நிறுத்தம் மேலாளர்களுக்குத் தேவையாய்
இருந்தது. சோம்பல் முறிந்து, பேசிச் சிரித்து, பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவர்கள், ரத்தன்டாடா உடனில்லாததை உணர்ந்து அங்குமிங்கும் தேடினார்கள். தேநீர் பருகப் போனரா ஓய்வெடுக்கப் போனாரா என்றெல்லாம் யோசித்தால், ஓட்டுநர் அருகே சாலையில் மண்டி யிட்டு, சக்கரத்தை மாற்ற உதவிக் கொண்டிருந்தார் ரத்தன் டாடா. நெற்றியில் வியர்வை… இதழ்களில் புன்னகை… நெஞ்சில் மனிதம்!!
பெரிய மனிதர்கள் எளிமையானவர்கள்
ஒவ்வொரு விதத்திலும் முழுமையானவர்கள்.
Leave a Reply