கான்பிடன்ஸ் கார்னர் – 3

ஆப்பிரிக்கப் பழங்குடியினர், பயன்தராத மரங்களை வெட்டுவதில்லை. மரத்தைச் சுற்றி வட்டமாக நின்று கொண்டு வசைச் சொற்களை வீசுவார்கள். கெட்ட அதிர்வுகள் சுட்டுச்சுட்டு அந்த மரம் பட்டுப்போய்விடும். எதிர்காலத்தில் பயன்படக்கூடிய மனிதர்களைக்கூட அவர்களின் அப்போதைய செயல்திறன்

குறைவுக்காக விமர்சிப்பவர்கள், இந்தப் பழங்குடியினர் போலத்தான். மரமானாலும் சரி, மனிதரானாலும் சரி. பொதுவில் ஒரு பண்பு இருக்கிறது. வசை பாடினால் வீழ்ச்சி ஏற்படுகிறது. வாழ்த்தினால் வளர்ச்சி ஏற்படுகிறது.

நாம் மற்றவர்களை வீழ்த்தப்போகிறோமா?
வளர்க்கப் போகிறோமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *