தன்னைப் பற்றிய விமர்சனங்களையும் பாராட்டு மொழிகளையும் எல்லோரிடமும் சேகரித்துக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அவற்றை ஒரு மூட்டையில் சேகரித்து வைத்திருந்தாள். வளர வளர அதை மறந்தும் போனாள். வெற்றிமிக்க இளம்பெண்ணாய் வளர்ந்து சிறந்த பிறகு அந்த மூட்டை அவள் கண்களில் பட்டது. எழுத்துக்கள்
மங்கியிருந்தன. காகிதம் இற்றுப்போயிருந்தது. ஆனால், அவளுக்கு இப்போது தன்னைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது. அடுத்தவர்களின் அபிப்பிராயங்கள் மங்கியிருந்தன. நம்மை உணர்வதே நல்லது.
Leave a Reply