கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

மனித வாழ்வின் மகத்தான சோகம் எதுவென்று சாதனையாளர் ஒருவரிடம் சில இளைஞர்கள் கேட்டார்கள். ”எந்த இலக்கையும் வகுத்துக் கொள்ளாமல், வாழ்வில் எதையுமே சாதிக்காமல் இருப்பதுதான் மகத்தான சோகம்” என்றார் அவர். இளைஞர்கள் புறப்பட நினைத்தபோது, ”இன்னொரு பெரிய சோகம் இருக்கிறது” என்றார்.

”எல்லா இலக்குகளையும் எட்டிவிட்டு, புதிதாய் எட்ட இலக்குகள் எதையும் வகுக்காமல் பழைய வெற்றிகளின் போதையிலேயே வாழ்வைக் கழிப்பதுதான் ஆகப்பெரிய சோகம்” என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *