வயது முதிர்ந்த தந்தையின் தொண தொணப்பால் நடுத்தரவயது மகன் எரிச்சலில் இருந்தார். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல், காகத்தைக் காட்டி, ”அது என்ன பறவை” என்று தந்தை இரண்டு மூன்று முறை கேட்டார். எரிச்சலான மகனிடம், நாற்பது வருடங்களுக்கு
முந்தைய நாட்குறிப்பை நீட்டினார் தந்தை. தன் மகன் மூன்று வயதில், காக்கையைக் காட்டி, ”அது என்ன பறவை” என்று ஒரே வாரத்தில் இருபத்து மூன்று தடவை கேட்டதும், தான் பிரியத்துடன் பதில் சொன்னதும் அதில் எழுதப்பட்டிருந்தது. மகனுக்கு, முதியவர்கள் உலகம் புரிந்தது.
Leave a Reply