கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4

அந்தப் பணக்காரச் சிறுவனுடன் ஏழைச் சிறுவன் ஒருவன் கட்டிப் புரண்டு சண்டை போட்டான். தோற்றுப் போனதும் ஏழைச் சிறுவன் சொன்னான். ”உன்னைப் போல நல்ல சாப்பாடு கிடைத்திருந்தால் நானும் ஜெயித்திருப்பேன். பணக்காரச் சிறுவன் அதிர்ந்து போனான். அன்று முதல் எளிய ஆடைகளே அணிந்தான்.

எளிய உணவையே உண்டான். பெற்றோரின் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தாமலேயே வாழ்ந்தார். அந்த ஏழைச்சிறுவன் யாரென்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பணக்காரச் சிறுவன் பிறருக்குப் பயன்படும் விதமாய் வளர்ந்து வாழ்ந்து வரலாறு படைத்தார். ஆல்பர்ட் ஸ்வீட்சர்தான் அந்தச் சிறுவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *