எதைச் சொல்வது?
புகழ்ந்து சொல்வது பின்னால் சலிக்கும் இகழ்ந்து சொல்வது எதிர்ப்புகள் வளர்க்கும் மகிழ்ந்து சொல்வது மனதை மலர்த்தும் உணர்ந்து சொல்வதே உயர்வுகள் வளர்க்கும் அறிவுரை சொல்வது அலுத்திடச் செய்யும் பரிந்துரை சொல்வது தவிர்த்திடச் செய்யும் விரித்துரை சொல்வது விரயங்கள் செய்யும் அனுபவ உரையே ஆயிரம் செய்யும் பதட்டத்தில் சொல்வது பகையை வளர்க்கும் மயக்கத்தில் சொல்வது மமதை வளர்க்கும் … Continued
கான்பிடன்ஸ் கார்னர் – 5
மலைச்சரிவில் குழந்தைகளுடன் இறங்கிக் கொண்டிருந்தார் அந்த மனிதர். செங்குத்தாய் இறங்கியது பாதை. குழந்தைகள் மேலேயே திகைத்து நின்று கொண்டிருக்க, மிகக்கவனமாய் பாதைகளில் கால் வைத்துப்பாதி தூரம் வரை இறங்கிவிட்டார் அவர். பார்த்துக் கொண்டிருந்த ஒருவருக்கு பயங்கரமான கோபம். “குழந்தைகளை
கான்பிடன்ஸ் கார்னர் – 4
வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்பே இல்லை. தனக்கு அறிவுரை சொன்ன வெற்றியாளரிடம் வெறுப்புடன் கேட்டார். “நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எனவே மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள். என்போல் தோல்வியைத் தழுவியிருந்தால்
கான்பிடன்ஸ் கார்னர் – 3
ஒரேயொரு நாள் எல்லோர் இதயங்களையும் எல்லோரும் பார்க்கலாம் என்று கடவுள் அறிவித்தார். மாசுமரு இல்லாமல் பொன்னாய் ஒளிவீசியது ஓர் இளைஞனின் இதயம். “அழகிய இதயன்” விருது அவனுக்கே கிடைக்கும் என்று அனைவரும் நினைத்தனர். கிழிந்தும், சிதைந்தும் கிடந்த ஒரு முதியவனுக்கே, “அழகிய இதயன்” விருதினை
கான்பிடன்ஸ் கார்னர் – 2
குளிர்கால இரவொன்றில் சாலையோரத்தில் அமர்ந்திருந்த முனிவரை அரசன் கண்டான். அவர் ஆடைகள் அணிந்திருக்கவில்லை. ஒரு சால்வையைத் தந்தான் அரசன். “கடவுள் தந்த தோலாடை இருக்க மேலாடை எதற்கு? என்னைவிட ஏழைகள் இருந்தால் அவர்களுக்கு கொடு”. முனிவர் பதில் கேட்டு ஏளனமாய்ச் சிரித்தான் அரசன்.
கான்பிடன்ஸ் கார்னர் – 1
இமையின் விளிம்பிலிருந்து எட்டிப்பார்த்த கண்ணீர்த்துளி, இறங்கத் தயாரானது. இருத்தி வைத்த இமையோ துடித்தது, தடுத்தது. கண்ணீர்த்துளி சொன்னது, “பிறந்த இடத்திலேயே இருந்தால் எனக்குப் பெருமையில்லை. சிப்பிக்குள்ளிருந்து முத்து சரியான நேரத்தில் வெளியானால்தான் மதிப்பு. என்னைத் தடுக்காதே!” இமைக்குப் புரிந்தது.
மரபின்மைந்தன் கவிதை
நேற்றின் கிழிசல்கள் தைப்பதற்கு நாளொன்று மலர்ந்தது இன்றைக்கு காற்றில் எழுதிய கனவுகளைக் கைப்பற்றும் காலம் இன்றைக்கு
நமக்குள்ளே
‘நமது நம்பிக்கை’ ஜுலை இதழில் ‘வாழ்வில் என்ன நேர்ந்தாலும் தன் அடிப்படைத் தன்மை இழக்காதவர்களே வெற்றியாளர்கள்’ என்னும் வரிகளில் வெற்றியின் ரகசியத்தை சொல்லிய பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்களின் வெற்றித்திசை விழாப் பேருரை வெகுசிறப்பு.
திண்டுக்கல் சிகரம் உரை
ஏற்றமிகு வாழ்வுக்கு ஏழு வழிகள் திண்டுக்கல் – “சிகரம் உங்கள் உயரம்” தொடக்கவிழாவில் சோம. வள்ளியப்பன் பேச்சு இந்தியா இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது என்று பலரும் யோசித்துக்
சோர்விலிருந்து தீர்வுக்கு
ஒரு துறையில் வேகமாய் முன்னேறிக் கொண்டே செல்கிறபோது தெரியாமல் ஏற்படும் பின்னடைவுகள் ஒரு மனிதனை சோர்வடையச் செய்வது ஏன்? ஒரேயொரு காரணம்தான் உண்டு. மற்றவர்கள் பார்க்கும் அதிர்ச்சிமிக்க பார்வை, ஒரு சிலரின் ஏளனப் பார்வை.