விவேகானந்தர் போராடிப் பெற்ற வெற்றி
-மரபின்மைந்தன். ம. முத்தையா காலத்தின் கணக்கு கடுகளவு பிசுகியிருந்தாலும், இந்தக் காவியுடைக் காவியம் கவனிக்கப்படாமலேயே போயிருக்கும்! கிழக்கில் உதிக்கும் பொழுதே கவனிக்கப்படுவதுதான் சூரியன். ஆனால், இந்தச் சூரியனையோ மேற்குத் திசைக்குப் போன பிறகுதான் உலகம் உன்னிப்பாகப் பார்த்தது.
மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் !!
வள்ளுவர் அறக்கட்டளை க. செங்குட்டுவன் நேர்காணல் வள்ளுவர் ஹோட்டல்ஸ், வள்ளுவர் நூலகம், வள்ளுவர் அறக்கட்டளை, வள்ளுவர் கேட்டரிங் கல்லூரி என்று எல்லாத் திசைகளிலும் திருவள்ளுவருக்குப் பெருமை சேர்த்து வரும் கரூர் க.செங்குட்டுவன், பல புதுமைகளின் பிறப்பிடமாய்த் திகழுகிறார். அவருடன் உரையாடிய போது…
ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு
-ஏ.ஜே. பராசரன் நிறுவனங்களின் நிர்வாக மேலாண்மையை வரையறுக்கும் போக்கில் மேக்ஸ் வெபர் போன்றவர்களின் கோட்பாடுகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கடந்த இதழில் விரிவாக சிந்தித்தோம். இதில் மேஸ்லோ ஐந்தடுக்குக் கோட்பாடு ஒன்றை நிறுவினார். அதாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வருபவர்களுக்கு ஐந்து தேவைகள் இருக்கின்றன என்றார் அவர்.
சந்தைப் படுத்துவோம்! சாதனை குவிப்போம்!
-தி. க. சந்திரசேகரன் முன்னிலைப்படுத்துதல் என்றால் என்ன என்பதையும், அதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் சென்ற இதழில் கண்டோம். இனி அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி ஆராயலாம்.
ஒளிமயமான எதிர்காலம்
சுகி. சிவம் எது? எது? எப்ப? எப்ப? பதினாறாம் லூயி மன்னர் மட்டும் ஒரு சின்ன ஆபரேஷன் செய்து கொண்டிருந்தால் பிரெஞ்சுப் புரட்சியே நடந்திருக்காது என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். ஓரளவு உண்மைதான் இந்தச் செய்தி.
என்ன செய்யலாம் எதிர்ப்புகளை?
-சினேகலதா cheap software எல்லாப் புராணங்களிலும், நல்ல காரியங்களுக்கு எதிர்ப்புகள் வருவதாகச் சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்கு சொல்லப்படுகிற எல்லாக் கதைகளிலுமே சாமானிய மனிதர்கள், பெரிய அரக்கர்களை வீழ்த்துகிறார்கள்.
களஞ்சியம் சின்னப்பிள்ளையின் வாழ்க்கைத் தொடர்
– அமரர் பூ.சொல்விளங்கும் பெருமாள் களஞ்சியம் இயக்குநர் குமார் கையில் வைத்திருந்த தாளில் உள்ள செய்தியை எல்லோருக்கும் கூறிக் கொண்டிருந்தார்.
ஆரகிள் நிறுவனர் லேரி எல்லிஸன்
ஆரகிள். உலகின் முன்னணி டேடாபேஸ் நிறுவனம். தகவல் தொடர்பு யுகத்தின் தாய்வீடு என்று ஆரகிள் நிறுவனத்தை அவசியம் சொல்லலாம்.
ஆளப்பிறந்தவன் நீ
-தயாநிதி இன்றைய நவீன உலகில், தனி மனிதராய் செயல்படுவதைக் காட்டிலும் குழுவாய், குழுவில் அங்கமாய் செயல்படுவதே பெரிய வெற்றிகளை ஈட்டித் தருகிறது. நமது ஆளுமைத் திறனை நமது பணிகளில் செலுத்தும்போது, அதன் செயல்பாடும், விளைவும் நமது கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆனால், நமக்கான பணிகளைச் செய்யுமாறு மற்றவர்களிடம் நாம் நமது ஆளுமைத் திறனைக் காட்டும்பொழுது, நாம் தவறானவர்களாக, … Continued
சேது சமுத்திரத் திட்டம்…
145ஆண்டுகளுக்குப் பிறகு சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுவதற்கான அரசாணை பிறந்திருக்கிறது. அந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதால் பொருளாதார நன்மை, வாழ்க்கைத் தரத்தில் மேம்பாடு, உலகளாவிய புதிய வாய்ப்புகள் போன்ற உயரிய நன்மைகள் மலர உள்ளன.