கான்பிடன்ஸ் கார்னர் : 5

அந்தச்சிறுவனுக்கு சந்தேகம். அக்காவிடம் கேட்டான். “கடவுளை நாம் பார்க்க முடியுமா?” அக்கா சொன்னாள், “அவரெங்கோ சொர்க்கத்திலிருக்கிறார். நாமெங்கே பார்க்க முடியும்?”அப்புறம் அம்மாவிடம் கேட்டான், “அவர் நம் இதயத்துக்குள்தான் இருக்கிறார். நாம் பார்க்க முடியாது”. பையனுக்கோ ஏமாற்றம். பிறகு,

தன் தாத்தாவிடம் கேட்டான். “நீங்கள் கடவுளை பார்த்திருக்கிறீர்களா தாத்தா?” அவர் சொன்னார், “நான் எதைப் பார்த்தாலும் கடவுளைத்தான் பார்க்கிறேன். பூக்களின் சிரிப்பில், சூரியனின் உதயத்தில், பறவைகளின் பாட்டில், குழந்தைகளின் பேச்சில், ஏழையரின் புன்னகையில்…. எல்லாவற்றிலும் கடவுளைப் பார்க்கிறேன்” என்றார். “பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான். அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்” என்பது பாடல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *