திட்டமிடு தொட்டுவிடு

-மகேஸ்வரி சற்குரு

விண்ணைக் கைகள் தொடமுடியாது. ஆனால் விண்ணை விஞ்சுவது மிகத் தெளிவான எண்ணங்கள்!

“தூய சொல்லும் நேர்மையுமே ஒருவனை வெற்றி எனும் மாளிகைக்கு அழைத்துச் செல்லும்” – மில்டனின் இந்த வரிகள் உண்மையை மட்டுமல்ல, மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வழியைச் சொல்கிறது.

நான் மிகச் சிறந்த தொழிலதிபராக வேண்டும் என்பது லட்சியமாக இருக்கலாம். இலட்சியத்தில் இருக்கின்ற வேகம் லட்சியம் நிறைவேறவேண்டும் என்பதிலும் இருந்தால்தான் வெல்வது எளிது. எண்ணங்களில் தெளிவும் நம்மீதே நமக்குள்ளே நம்பிக்கையும், துணிச்சலும்தான் நமக்கான மூலதனங்கள். முதலீடுகள் என்பது ரூபாய்த்தாள்கள் அல்ல! தகிக்கின்ற லட்சிய நெருப்புதான்.

டி.வி. வந்த புதிதில் டி.வி பழுதுபார்க்கும் ஒரு தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்தார் ஒருவர். இரவுகள் கூட அவரின் பகல் பொழுதானது. தொழிலில் ஒரு நேர்மை, நல்ல உழைப்பாளி என்ற பெயர் கிடைத்தது. உழைப்பாளி சரி நல்ல முதலாளி என்று நான் மாறுவது எப்போது என்ற கேள்வி, சதா மனதைத் தகிக்க ஆரம்பித்தது. காலை முழுவதும் வேலை, மாலை முழுவதும் சிந்தனை, இரவு முழுவதும் திட்டமிடல். ஓய்வு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே. மன நெருப்பு யாகத் தீயாக வளர்ந்தது. சிறிய அளவில் சேலத்தில் ஒரு டி.வி. ஷோரூம் ஆரம்பித்தார். முதல் முதலாக அனைத்து கம்பெனி டி.வி.க்களையும் ஒரு கூரையின் கீழ் கொண்டு வந்தார். இன்று கோவை, கரூர், பொள்ளாச்சி உள்ளிட்ட நகரங்களில் காணப்படும் “நட்ஹழ்ல் உப்ங்ஸ்ரீற்ழ்ர்ய்ண்ஸ்ரீள்”என்ற நிறுவனம்தான் அது. 347 தொழிலாளிகள் வேலை செய்கின்றனர். அந்த வெற்றியாளனின் வாசகம், “தொழிலுக்கு உண்மையாக இருங்கள்! நீங்களும் ஒரு நாள் முதலாளிதான்”.

(தன்னுடைய) கடந்து போன தோல்விகளையும் என்பதைவிட, வெற்றிக்கான முயற்சிகளையும், எத்தனை வெற்றிகள் பெற்றிருக்கிறோம் என்பதன் கணக்கிடல்களையும் விட்டொழிக்கும் நாளே நமக்குத் திருநாளே! ஏன்? ஏன் முடியாது? ஏன் என்னால் முடியாது? ஏன் இப்பொழுதே என்னால் முடியாது என்ற பரிசீலனைகள்தான் வாழ்க்கையை எடை போடுவதற்கான எடைக் கற்கள் ஆகும். என்ன எடைகள் தான் சற்று வித்தியாசப்படும். சலனம் இருந்தால் வெற்றி அவரவர் கைகளில்தான்.

சுயநலமும் தனித்தன்மையும் நம்மை நிலை நிறுத்தி சிம்மாசனத்தில் அமர வைக்கும். சிம்மாசனங்கள் ஒருபோதும் நமக்காக நகர்ந்து வருவதில்லை. அப்படி ஒரு மந்திரமும் நடக்காது. நம்முடைய தலைமைப்பண்பும் சுயபலமும் வெகு சுலபமாக நமக்கான சிம்மாசனத்திற்கு அழைத்துச் சென்றுவிடும். நிரந்தரமாக நம் இருக்கையை மட்டுமல்ல, இருத்தலையும் தக்கவைத்துக் கொள்வதில் இருக்கிறது வெற்றி.

90 வயதிலும்கூட ஒரு பெரியவர் இரும்புப் பட்டறையில் நுட்பமாகவும், கூராகவும் வாள் செய்து கொண்டு இருந்தார். அரசன் மிகவும் ஆச்சரியப்பட்டு அவரிடம், உங்களின் கண்பார்வை மங்கவில்லையா? உடல் தளரவில்லையா? என்று கேட்டபொழுது, பெரியவர் சொன்னார், “நான் 21 வயதில் பட்டறையில் வாள் செய்ய ஆரம்பித்தேன். அன்றிலிருந்து இன்று வரை என் மனக் கண்முன் தோன்றுவது வாளின் கூர்மையான முனையும் கைப்பிடியும்தான். நல்லதொரு கைப்பிடியும் கூர்மையான முனையும் இருப்பதுதான் சிறந்த வாள். இரண்டையும் மட்டும் பார்த்து எழுச்சியுடன் செய்வது என்னுடைய வேலை, 21 வயதில் இருந்த அதே மன எழுச்சிதான் இந்த 90 வயதிலும் என்னிடம் இருக்கிறது. பழகிப் போனது கைகள் மட்டுமல்ல மனமும்தான். நெருப்புக் கங்குகள் கூட எனக்கு கூர்மையான வாளின் முனையாகத்தான் தெரியும்” என்றாராம்.

இன்று நம் அனைவருக்கும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ரேஷன் கார்டு, கோல் ப்ளஸ் கார்டு என்று எல்லா வகை கார்டுகளும் இருக்கின்றன. நமக்குத் தேவை ஒரு அம்க்ஷண்ற்ண்ர்ய் ” அண்ம் – இஹழ்க் தான். ஆம் நண்பர்களே! விருப்பமான குறிக்கோள் அட்டையை சிந்தனையில் வைத்து இருந்தால் போதும். அது தன் வேலையைச் செய்துவிடும்.

எண்ணங்கள் எழுச்சியாக இருந்தால் போதும்.

விண்ணை விஞ்சி விடலாம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *