கான்ஃபிடன்ஸ் கார்னர் -2

மகாபாரத யுத்தத்தில் தன்னுடைய ஆசிரியர் துரோணரின் மீது அம்பு தொடுத்தான் அர்ச்சுனன். அந்தச் செய்தி கேட்டு ஏங்கி அழுதான் ஏகலைவன். “இந்தப் பாண்டவர்கள், எனக்கும், அவர்களுக்கும் ஆசிரியரான துரோணரைக் கொன்று விட்டார்களே! என் கட்டை விரல் மட்டும் இருந்திருந்தால் என்

ஆசிரியரைக் காப்பாற்றியிருப்பேனே” என்று புலம்பினான். கட்டை விரலை துரோணர் கேட்டது அர்ச்சுனனுக்காக! ஆனால் ஏகலைவன் அழுததோ துரோணருக்காக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *