புரோக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் 1879 வரை அதிக அளவில் மெழுகு வர்த்திகளைத் தயாரித்தது. விற்பனையும் அபாரம். எடிசன் மின்சார பல்பைக் கண்டுபிடித்த பிறகு மெழுகுவர்த்தி விற்பனை குறைந்து உருகிக்கொண்டே வந்தது. பண நெருக்கடி ஏற்பட்டது. போதாக் குறைக்கு ஒரு பணியாளர் மதிய உணவுக்குப் போகையில் இயந்திரத்தை நிறுத்த மறந்ததில், தொழிற்சாலை முழுக்க ஒரு
நுரைப் படலம் படிந்தது. அதை அந்நிறுவனம் அகற்றவில்லை. ஆராய்ந்தது. அப்படித்தான் ஐவரி சோப் உருவானது. நம்பிக்கை குறையாதிருந்தால், சிரமமான சூழ்நிலையே ஒரு தீர்வைத் தயாரித்துத் தரும்.
Leave a Reply