பரீட்சைக்கு நேரமாச்சு!

1996ல் மும்பை ஐ.ஐ.டி.யில் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. உறுதியில்லை என்றாலும் சுவாரஸ்யமான சம்பவம்.

மறுநாள் தேர்வுக்கு முதல்நாள்வரை தயாராகாத நான்கு நண்பர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். தேர்வு நாள் அன்று, தேர்வு தொடங்கி இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு, உடலெல்லாம் அழுக்கும் க்ரீசும் அப்பியிருக்க தலைமைத் தேர்வாளர்முன் பரிதாபமாக நின்றார்கள்.

வரும் வழியில் கார் டயர் வெடித்துவிட்டதால் தேர்வுக்கு வரமுடியவில்லை. எனவே தங்களுக்கு மறு தேர்வு வைக்க வேண்டுமென்று வேண்டினார்கள். அவர்கள் மேல் அனுதாபம் கொண்ட தலைமைத் தேர்வாளர் ஒப்புக் கொண்டார். அன்று வெள்ளிக்கிழமை. எனவே திங்கட்கிழமை தேர்வு நடைபெறும் என்றார்.

இந்த நான்கு பேரும் மகிழ்ச்சியுடன் விடைபெற்று விழுந்து விழுந்து படித்துத் தேர்வுக்குத் தயாரானார்கள். திங்கட்கிழமை வந்தது. இது பிரத்யேகத் தேர்வு என்பதால் நான்கு மாணவர்களும் தனித்தனி அறைகளில் அமரவேண்டும் என்றார் தேர்வாளர்.

நன்றாகப் படித்த தெம்பில் உடனே ஒப்புக் கொண்டார்க ள் மாணவர்கள். மொத்தம் நூறு மதிப்பெண் களுக்கான கேள்வித்தாளில் இரண்டே இரண்டு கேள்விகள் இருந்தன.

1. உங்கள் பெயரென்ன? (2மதிப்பெண்கள்)

2. உங்கள் காரில் உள்ள நான்கு டயர்களில் எந்த டயர் வெடித்தது (98 மதிப்பெண்கள்).

ஆஹா….. இதற்குப் பெயர்தானா பலப்பரீட்சை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *