இதழ் வழியே கொஞ்சம் SMS

வாழ்வின் பாதி பிரச்சினை
சிந்திக்காமல் செயல்படுவதால்
ஏற்படுகிறது.
மீதி பிரச்சனை

செயல்படுத்தாமல் சிந்தித்துக்கொண்டே……
இருப்பதால் ஏற்படுகிறது.
சிந்தித்து….. செயல்படுங்கள்!!!

வெற்றிக்குப் பின் ஓய்வு
எடுக்காதீர்கள்!
நீங்கள் பெற்றது
வெற்றி அல்ல
வெறும் அதிர்ஷ்டம்
என்று சொல்ல பல
உதடுகள் துடித்துக்
கொண்டிருக்கின்றன!!

வாழ்க்கை
ஒரு புல்லாங்குழல்!
துளைகளும்,
வெறுமையும் நிறைந்தது!
நீங்கள் திறமையானவர்களாக
இருந்தால்
பல மாய கானங்களைக்
காற்றில் பரப்ப முடியும்.

க டலில் விழுகிற நீர்த்துளிக்கு
எந்த தனித்தன்மையும் இல்லை!!

தாமரை இதழில் விழுந்த
நீர்த்துளிக்கு முத்துபோல் ஒளிரும் தன்மையுண்டு!!

உங்கள் திறமைகளை நிரூபிக்கும்
இடங்களை சரியாக தேர்வு செய்யுங்கள்

ஒரு மரத்தால் ஒரு லட்சம்
தீக்குச்சிகள் தயார் செய்ய முடியும்.
ஒரே தீக்குச்சியால் ஒரு லட்சம்
மரங்களை அழிக்கவும் முடியும்.

ஒரு தீய எண்ணம்
நம்முள் இருக்கும்
அத்தனை நல்ல
எண்ணங்களையும்
எரிக்கக்கூடும்!!

கிளையில் அமர்ந்துள்ள பறவைக்கு
காற்றில் கிளைகள் அசைவதால்
பயம் இல்லை. காரணம் அவைகள்
கிளைகளை நம்புவதில்லை!
தன் சிறகுகளை நம்புகின்றன.

உங்கள் திறமைகளில்
நம்பிக்கை கொள்ளுங்கள்!!

உங்கள் பிரார்த்தனைகள்
நிறைவேறுவதில் நீங்கள்
மகிழ்ச்சியடைந்தால்
கடவுள் சக்தியில் உங்களுக்கு
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.
உங்கள் பிரார்த்தனைகள்
தோல்வியடைந்தால்
கடவுளுக்கு உங்கள் சக்தியில்
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.

இலவம்பஞ்சு காற்றில் மிதப்பது
அதன் அதிர்ஷ்டம்.
ஒரு பறவை காற்றில் பறப்பது
அதன் உழைப்பு!
உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை
என்று கவலை கொள்ளாதீர்கள்!!
உழைப்பும் நம்பிக்கையும்
என்றும் உங்களுக்கே உரியவை!!

ஜப்பானிய பஸ் நிறுத்தத்தில் எழுதப்பட்ட
புகழ்பெற்ற வாசகங்கள்:
இங்கே பேருந்துகள் மட்டும்தான் நிற்கும்.
உங்கள் இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டே இருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *