நமது பார்வை

வீடடங்கு உத்தரவு

தேர்வு நேரம் இது. மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாய், உந்து சக்தியாய், ஒவ்வொரு வீடும் உடனிருக்க வேண்டிய காலம் இது.

மாணவ மாணவியர் ஊக்கம் கொள்ளும் விதமாகவும், அதேநேரம் அலட்சியமாய் இருந்து விடாமலும் வீட்டில் இருப்பவர்கள் பார்த்துக் கொள்வது அவசியம்.

ஒரு சில வீடுகளில் அதிக சத்தமும், அலறும் தொலைக்காட்சியும் அதீதமான அளவு விருந்தினர் வருகையும் இருக்கக்கூடும். அவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தாங்களே வீடடங்கு உத்தரவு பிறப்பித்துக் கொள்ளலாம்.

தார்மீக பலமாய் இருப்பது என்றால் என்ன என்பதை அனுபவரீதியாய் பெற்றோர்களும், பிள்ளைகளும் உணரக்கூடிய காலம் இது.

இப்போது ஒன்பதாம் வகுப்பிலும் பதினொன்றாம் வகுப்பிலும் படிக்கிற குழந்தைகள் உங்களுக்கு இருக்கிறார்களா? அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் உண்டு. இந்த ஆண்டு பத்து-பன்னிரண்டு வகுப்பு களில் வெற்றி பெறும் மாணவ மாணவியரின் பேட்டிகள் பல பத்திரிகைகளில் வெளிவரும். அவற்றை வெட்டி பத்திரப் படுத்துங்கள்.

அடுத்த பொதுத் தேர்வுக்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும். உங்கள் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் அதில் கிடைக்கும்.

உங்கள் வீட்டுக் குழந்தை தேர்வில் வெற்றி பெற எங்கள் பிரார்த்தனைகளும் நல்வாழ்த்துக்களும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *