கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4

வாழ்க்கை பற்றிய விரக்தியுடன் அமர்ந்திருந்தவனின் காலருகே வீழ்ந்தது அந்தப் பழுப்பு இலை. அது பேசுவது போல் அவனுக்குத் தோன்றியது. “நான் என் வண்ணங்களை மாற்றி மாற்றி மரத்திற்கு அழகு சேர்ந்தேன். என்னில் எவ்வளவு துளைகள் பார். எத்தனையோ

பூச்சிகளுக்கு உணவானேன். என்னையும் சேர்த்துதான் மரம்”. இந்த மனிதன் நிமிர்ந்தான். உலகம் என்னையும் சேர்த்துதான். என்னால் இயன்ற பங்களிப்பை உலகுக்கு அளிப்பேன். அவன் நடையில் இப்போது நடுக்கமில்லை. காரணம்.. அந்த இலை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *