பிளாஸ்டிக் மாலையைக் கையில் வைத்துக் கொண்டிருந்தாள் சிறுமி. அதைத் தன்னிடம் தருமாறு வற்புறுத்தினார் அவளது தந்தை. தர மறுத்து அழுது அடம்பிடித்தாள் அவள். பெருமூச்சுடன் தன் பையிலிருந்த முத்து மாலையைத் தொட்டுப் பார்த்து
கொண்டு, “இதை அணியும் பக்குவம் அவளுக்கு இன்னும் வரவில்லை” என்று முடிவெடுத்து, முத்துமாலை தருவதை ஒத்திப் போட்டார் அவர். நாம் சின்ன விஷயங்களை இழக்க விரும்பாமல் கடவுளிடம் சண்டையிடுகிறோம். அவர் இன்னும் பெரிய விஷயங்களை நமக்காக வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்.
Leave a Reply