கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

எண்பது

வயது தாண்டியும் மகிழ்ச்சியாய்த் தோற்றமளித்த மனிதர் ஒருவரைக் கண்ட இளைஞர் பணிவுடன் கேட்டார். ”அய்யா! நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே காணப்படுகிறீர்கள். சரிதான். ஆனால், எதையாவது இழந்தோமே என்று வருந்துகிறீர்களா?”. பெரியவர் சொன்னார், ”இல்லை! இழந்த நிமிடங்களை மீண்டும் பெற முடியாது என்பதால், எதிர்வரும் விநாடிகள் ஒவ்வொன்றையும் முழுமையாய் வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் மனதுக்குள் சொல்வேன். இழந்ததை எண்ணி எதிர்வரும் நிமிடங்களை நான் வீணடிக்கவே மாட்டேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *