இந்திய ஜனாதிபதியாவேன்..

தொழிலதிபர் முகமது இலியாஸ்

அதிரடி பேட்டி

உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால்?

என்னுடைய பிறந்த ஊர் தற்பொழுது வ.உ.சி மாவட்டத்திலுள்ள வல்ல நாடு என்ற குக்கிராமம். என்னுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். அதில் முதல் ஐவர் ஆண்கள் கடைசி இருவர் பெண்கள். நான் என்னுடைய பெற்றோருக்கு நான்காவது ஆண் மகன். என் பிறந்த தேதி 21-09-1959.

இளமைக்காலத்தில் ஆன்மீகம் மற்றும் விளையாட்டுத்துறையில் அதிக கவனம் செலுத்தினேன்.

ஆன்மீகத்திலே அதிகம் கவனம் செலுத்தியதின் காரணமாக பெயர் சொல்லும் அளவிற்கு மாபெரும் விளையாட்டு விளையாட்டு வீரனாக என்னால் திகழ முடியவில்லை. சிறு வயதிலிருந்தே என்னால் முடிந்த உதவிகளை (பணம் உட்பட) மற்றவர்களுக்கு செய்து வருகிறேன். 1980ஆம் ஆண்டு வரலாறு பாடத்தில் நான் இளநிலைப் பட்டதாரி ஆனேன். நான் தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முதுநிலை ங.நஸ்ரீ., இரண்டாம் ஆண்டு மாணவராக இருக்கிறேன். என் அப்பா ஆரம்பித்த பஸ் கம்பெனி, சேம்பர் செங்கல், ஆஸ்பத்திரி இவற்றை என் சகோதரர்களுடன் நடத்தி வந்தேன். நான் தனியாக கடந்த இருபத்தியிரண்டு ஆண்டு காலமாக, திருநெல்வேலியில் ஙஏ ஜூவல்லர்ஸ் ட கற்க் என்ற நகைக்கடையை நடத்தி வருகிறேன். எங்களது ஙஏ ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் 77 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். நான் தற்போது ப.ங.ஏ.நற்ங்ப்ப் என்ற பெயரில் ப.ங.ப. கம்பிகளைத் தயார் செய்யக்கூடிய தொழிற்சாலை ஒன்றைக் கட்டி வருகிறேன்.

நீங்கள் சுயமுன்னேற்றப் பேச்சாளராகவும் எழுத்தாள ராகவும் உருவானது எப்படி?

சிறுவயது முதலே நான் ஒரு பெரிய பேச்சாளராக ஆக வேண்டும் என்ற உந்துதல் என்னை அறியாமலேயே என்னிடம் இருந்து வந்தது. ஆனால் நான் பேச ஆரம்பித்தது என்னுடைய 38ஆவது வயதில் அதாவது 1997ஆம் ஆண்டு முதல் இன்றுவரை பட்டிமன்றம், ஆன்மிகச் சொற்பொழிவு, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் மற்றும் ஏனைய விழாக்களில் 1260 கூட்டங்களில் பேசியுள்ளேன். கடந்த பத்தாண்டுகளாக திருநெல்வேலி வடக்குச் சுழற் கழகத்தில், வாரம் ஒரு தகவல் என்ற பெயரில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒவ்வொரு தலைப்பில் பேசி வருகிறேன்.

பேச ஆரம்பித்த புதிதில் என்னுடைய பேச்சைக் கேட்ட நண்பர்கள், சுழற்சங்கத்தினர் மற்றும் பலர் என்னுடைய கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுவதோடு அறிவுப்பூர்வமான தாகவும் மற்றும் பிரயோஜனமுள்ளதாகவும் இருக்கிறது. எனவே, என்னுடைய கருத்துக்களை புத்தகமாக வெளியிடுமாறு கூறினர். தர்ற்ஹழ்ஹ் இப்ன்க்ஷல் நான் பேசிய பேச்சுக்களின் தொகுப்பே என்னுடைய இரண்டு புத்தகங்கள். 1. பொன்னான வாழ்வு மலரட்டும். 2. வாழ்க்கை ஒரு தங்கப் புதையல். கடந்த ஐந்தாண்டுகளில் என்னுடைய முதல் புத்தகம் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியுள்ளன. என்னுடைய இரண்டாவது புத்தகம் கடந்த 26.12.10 அன்று மாண்புமிகு மத்திய உள்துறைஅமைச்சர் ப.சிதம்பரம் அவர்களால் வெளியிடப்பட்டது.

சிறு வயது முதலே என்னிடம் தன்னம்பிக்கை மிகுதியாக இருந்தபடியாலும், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி இருந்ததாலும் எந்தவொரு விஷயமும் என்னை பாதிக்கவில்லை. மோசமான ஒரு சூழ்நிலை உருவாகிற போது என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்வேன்.

உங்கள் வருங்கால கனவுகள் மற்றும் திட்டங்கள்?

கண்டிப்பாக ஒரு நான் இறைவனின் அருளால் இந்தியத்திருநாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்பேன். அதற்கான முயற்சியிலும் இப்போதே ஈடுபட்டு வருகிறேன். என்னுடைய 72ஆவது வயதில் 25.06.2032 அன்று இந்திய நாட்டினுடைய ஜனாதிபதியாக பொறுப் பேற்பேன்.

தேதியைக்குறிப்பிட்டு ஜனாதிபதி ஆவேன் என்று நீங்கள் கூறுவது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சியென்ன?

ஜனாதிபதியாக வேண்டுமென்பது என் நீண்ட காலக்கனவு. பல இடங்களில் இருந்தும் பொறுப்புகளும் பதவிகளும் வந்தாலும் என் இலக்கு சிறிய பதவிகளோடு நின்றுவிடவில்லை. தற்போது எம்.எல்.சி ஆவதற்கான முயற்சியில் உள்ளேன். நிச்சயம் குறிப்பிட்ட தேதியில் நாட்டின் பதினேழாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்பேன்.

எப்படி உங்களால் தேதி குறிப்பிட்டு சொல்ல முடிகிறது?

இன்று வரை நம்நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அனைவரின் சுயவிபரக் குறிப்பையும் வைத்துள்ளேன். அனைவரும் அதே தேதியில்தான் சட்டப்படி பொறுப்பேற்றுள்ளனர். அது போலவே நானும் அதே தேதியில் என் 72ஆம் வயதில் பொறுப்பேற்பேன்.

உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த தடைகள் அல்லது தோல்விகள், அப்பொழுது உங்களை ஊக்கப் படுத்திய சுயமுன்னேற்றச் சிந்தனை எது?

என் வீட்டில் நான் ஒருவன்தான் இளநிலைப் பட்டதாரி. சிறுவயது முதலே எனக்கு ஆன்மிகத்தில் அதிகமான ஈடுபாடு உண்டு. எனது தந்தை படிக்கவில்லை. நான் குடும்ப ரீதியாக தொழில் ரீதியாக முற்போக்குச் சிந்தனையோடு என் தந்தை, சகோதரர்களிடம் ஆலோசனை கூறினால் நீ பி.ஏ. படித்திருக்கிறாய் என்ற திமிரில் பேசுகிறாயா? உனக்கு என்ன தெரியும் என்று என் மனம் புண்படும்படி மட்டம் தட்டிப் பேசுவார்கள்.

எனவே நான் திருமணத்திற்கு முன்பே இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன்.

இறைவா எனக்கு ஆண்மக்கள் வேண்டாம். பெண் குழந்தைகளே போதும்.

என் சகோதரர்களும் தந்தையும் என்னை மட்டம் தட்டி வேதனை கொடுக்கும் போதெல்லாம் நான் மனம் தளராமல் இவர்கள் முன்னிலையில் மாபெரும் வெற்றி பெறுவேன் என்று எனக்கு நானே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன். இன்றுவரை இமயம் போலிருந்த என் தன்னம்பிக்கை வீண் போக வில்லை.

இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

குறிக்கோள் இல்லாத வாழ்க்கையும் இலட்சியம் இல்லாத பயணமும் கடிவாளம் இல்லாத குதிரையைப் போன்றது. தீர்மானிக்கப்படாத இலக்கு என்பது திசை தெரியாமல் செல்லும் படகுக்குச் சமம். இது போன்றுதான் குறிக் கோள் இல்லாத வர்களின் நிலைமையும் ஆகும். உடலுக்கு ஆன்மா எப்படியோ, மரத்திற்கு வேர் எப்படியோ அப்படியே செயல் களுக்குச் சரியான நோக்கங்கள் இன்றியமை யாதவை என்பது ஸிம்மன்ஸின் கருத்தாகும்.

12 வயது சிறுவன் ஒருவன் புதிய சைக்கிள் ஒன்று வாங்கி அதை ஜாலியாக ஓட்டிக் கொண்டிருந்தான். ஒரு நாள் அந்த சைக்கிள் திருடு போய் விட்டது. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவனுடைய சைக்கிள் கிடைக்கவில்லை.

ஆத்திரப்பட்ட அந்தச் சிறுவன் வீட்டு வாசற் படியில் நின்று கொண்டு என்னுடைய சைக்கிளைத் திருடியவன் என் கையில் சிக்கினால் அவனை அடித்து நொறுக்கி விடுவேன் என்று கத்தினான்.

அப்போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த போலீஸ்காரரின் காதில் அந்தச் சிறுவனின் சப்தம் விழுந்தது. உடனே அந்த போலீஸ்காரர் சிறுவனைப் பார்த்து, ‘தம்பி நீ கவலைப்படாதே. முதலில் குத்துச்சண்டையை பழகிக்கொள். அதன் பிறகு சண்டைக்குப் புறப்படு’ என்றார்.

உடனே அந்தச் சிறுவன் போலீஸ்காரரின் அறிவுரையை தன்னுடைய இலட்சியமாக தன் மனதில் ஆழமாகப் பதித்துக்கொண்டான். அதன் பிறகு குத்துச்சண்டையை முறையாகக் கற்ற அந்தச் சிறுவன் பல போட்டிகளில் கலந்து கொண்டு பலரை அடித்து நொறுக்கினான்.

பிற்காலத்தில் உலகக் குத்துச்சண்டை வீரராக மாறி உலகப்புகழ் பெற்றான். அவன்தான் உலகப் புகழ்பெற்ற முகமது அலி.

இலட்சியத்தை உருவாக்கிக் கொள்வதன் முக்கியத்துவம் என்ன?

இலட்சியம் உடையவர்கள் சிங்கத்தைப் போன்று காட்டுராஜாவாகத் திகழ்கிறார்கள். இலட்சியம் என்றால் என்ன? என்று கேட்கக் கூடியவர்கள் ஆட்டுக்குட்டியைப்போன்று மற்றவர்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக் கிறார்கள்.

நம்மிடம் இலட்சியம் இருந்தால் நம்முடைய வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஓடிக் கொண்டிருக்கும்.

உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கையளவு கொண்ட இதயம் இருக்கிறது. ஆனால் அந்த இதயத்தில் எழுகின்ற எண்ணங்களும் இலட்சிங்களும் வெவ்வேறானவை. நாம் நம்முடைய இதயத்தில் உயர்ந்த இலட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.

இலட்சியம் மட்டும் இருந்தால் போதாது. இலட்சியத்தைச் செயல்படுத்த முதலில் நல்ல எண்ணம் தேவை. தேவையில்லாத சிந்தனைகளை மனதில் இருந்து விரட்டவேண்டும்.

குறிக்கோ ளோடு இணைந்த நல்ல எண்ணம் இருந்தால் தன்னம்பிக்கை தானாக வரும்.

வெற்றியாளராய் மலர என்னவெல்லாம் தேவை?

எல்லா இரவுகளும் விடிகின்றன என்ற நம்பிக்கையில்தான் நாம் படுக்கைக்குச் செல்கி றோம். கீழே விழுந்தவன் எழுந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் எழுகிறான்.

நம்பிக்கையும் நல்ல எண்ணமும் இருந்தால் மட்டும் போதாது. சமயோசிதமாகச் சிந்திக்கக் கூடிய ஆற்றலை நமக்கு நாமே வகுத்துக்கொள்ள வேண்டும். அறிவு எல்லோரிடமும் இருக்கிறது. அறிவில்லாத மனிதன் என்று இந்த உலகத்தில் யாரும் இருக்கமுடியாது. இறைவன் வழங்கி இருக்கிற அறிவை, சூழ்நிலை, சந்தர்ப்பம் அறிந்து செயல்படுத்துவது நன்மை பயக்கும்.

அமெரிக்காவைச் சார்ந்த இராபர்ட் என்பவர் பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தார். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பாக விளங்கக்கூடிய பேனாவும் மையும் இல்லாமல் நீங்கள் அற்புதமாக எழுதலாம். விபரம் அறிய ஒரு டாலர் அனுப்புங்கள் என்று ராபர்ட்டுக்கு மணியார் டர்கள் வந்து குவிந்தன. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். ‘புத்திசாலிகளே, பென்சிலை வைத்து எழுதுங்கள்.’ இராபர்ட் ஏமாற்றவில்லை. கொஞ்சம் நிதானமாக யோசிக்காமல் பணம் அனுப்பியவர்கள்தான் ஏமாந்தார்கள்.

அறிவின் அடையாளம் எது?

தெரிந்ததைத் தெரிந்தது என்றும், தெரியாததைத் தெரியாது என்றும் யார் ஒப்புக் கொள்கிறார்களோ, அவர்களே உண்மையான அறிவாளி ஆவர். அறிவிற்கு அடையாளம் சுயநலம் கருதாமல் சேவை செய்வதுதான். மனம்விட்டுப் பேசுவதைத் தவிர, சிறந்த அறிவு இவ்வுலகில் வேறு ஒன்றும் இல்லை.

அறிவு என்பது மேலே பறக்க பறக்க உயர்ந்து கொண்டே போகும் வானம். எல்லாம் அறிந்து விட்டதாக நினைப்பவன் ஏதோ ஒரு படியில் நின்று விடுகிறான். ஒன்றும் தெரியாது என்று நினைப்பவன் மென்மேலும் உயர்ந்து கொண்டே இருப்பான்.

நாக்கைப் பார்த்து மருத்துவர்கள் நோயை அறிந்து கொள்வதைப் போன்று, அறிவாளிகள் ஒருவருடைய பேச்சைக்கேட்பதன் மூலம் அவருடைய மூளையிலும் இதயத்திலும் உள்ளதை அறிந்து கொள்வார்கள்.

நம்பிக்கை, நல் எண்ணம், சமயோசித அறிவு இவற்றோடு உழைக்கக்கூடிய ஆற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

உழைப்பின் உன்னதத்தை எவ்வாறு நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள்?

உழைப்பின் எந்த ஒரு மனிதனையும் ஏமாற்றுவதில்லை. மனிதர்களாகிய நாம்தான் உழைக்காமல் ஏமாந்து விடுகிறோம். மின் மினிப் பூச்சி பறக்கிறபோதுதான் பளபளக்கிறது. இது போன்று ஒரு மனிதன் சுறுசுறுப்போடு இயங்குகிற போதுதான் வாழ்க்கையிலே வெற்றியடைகிறான். நமக்கு இடைவிடாத முயற்சி தேவை.
விடாமுயற்சியின் இடத்தை எந்தவொரு கல்வியாலும், பரம்பரைச் சொத்துக்களாலும் நிரப்பமுடியாது என்று கால்வின் கூளிச் என்றஅறிஞர் கூறுகிறார். நம்முடைய தலைக்கு மேலே துன்பப்பறவை பறப்பதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் அப் பறவை நம் தலையில் கூடு கட்டாமல் இருப்பதை நம்மால் தடுக்க முடியும் எப்படி? உழைப்பால்.

பணக்காரராக வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறோம். ஆனால் அதற்கான உழைப்பை மேற்கொள்ளவேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை.

ஆடினால்தான் மயிலுக்கு அழகு. பாடினால் தான் குயிலுக்கு அழகு. ஓடினால்தான் ஆற்றுக்கு அழகு. உயர்ந்து நின்றால்தான் மலைக்கு அழகு. ஆர்ப்பரித்தால்தான் கடலுக்கு அழகு. மீண்டும் மீண்டும் முயன்றால்தான் மனிதனுக்கு அழகு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *