பள்ளியில் மாணவர் தலைவராய்
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவன், தந்தையிடம் அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதோடு, தனக்குத் தரப்பட்டிருக்கும் அதிகாரங்கள் பற்றியும் விரிவாக விளக்கினான். ஈடுபாட்டுடன் கேட்டுக் கொண்டிருந்த தந்தை இறுதியில் சொன்னார், “அதிகாரங்களை சரியாகக் கையாளும் ஒரே வழி, அவற்றை ஒருபோதும் பயன்படுத்தாமல் அன்பால் வழி நடத்துவது தான். மிகப்பெரிய மக்கள் தலைவர்களை ஆயிரக்கணக்கானவர்கள் பின்பற்றக் காரணம், அவர்களிடம் அன்பு இருந்ததால்தான். அதிகாரம் இருந்ததால் அல்ல!!”
Leave a Reply