கான்பிடன்ஸ் கார்னர் – 3

பெரிய மதத்தலைவராகப் பரிணமிக்க

விரும்பி, பயிற்சிகள் எடுத்தான் ஓர் இளைஞன். அவனால் மக்களை ஈர்க்க முடியவில்லை. கடவுளிடம் முறையிட்டான். “நான் உன் மதத்தைப் பரப்பத்தானே தலைவராக விரும்புகிறேன். என்னால் ஏன் புகழ்பெற முடியவில்லை?”. கடவுள் கனவில் வந்து ஒரு ஞானியைச் சென்று பார்க்கச் சொன்னார். அவன் உள்ளே நுழைந்ததும் அந்த ஞானி சொன்னார். “நீ ஏன் வெற்றி பெறவில்லை தெரியுமா? கடவுள் பணிக்கு தலைவர்கள் தேவையில்லை. தொண்டர்கள்தான் தேவை”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *