ஜவஹர்லால் நேரு – வாசிப்பில் நேசிப்பு

ஜவஹர்லால் நேரு- – வாசிப்பில் நேசிப்பு

ழந்தைகளால் மட்டுமின்றி குவலயத்தாலும் பெரிதும் நேசிக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேரு வாசிப்பில் வல்லவராகத் திகழ்ந்தார். அவர் லிஃப்டில் பயணம் செய்த பொழுதொன்றில் மின்வெட்டு காரணமாய் லிஃப்ட் நின்று விட்டது. தொழில்நுட்பம் பெருகியிராத அந்தக் காலத்தில் கதவைத் திறக்க நேரமாகிவிட்டது. வியர்வையில் குளித்தபடி வெளியேவந்த நேரு அமைதியாகச் சொன்னாராம், “இங்கே சில புத்தகங்களை வைத்துவிடுங்கள். இதுபோல் நேர்ந்தால் மின்சாரம் திரும்பும்வரை புத்தகம் படிக்கலாம். நேரம் வீணாகாது!!”

நவம்பரில் பிறந்தநாள் காணும் நேருவே! உங்களுக்குத் தெரியுமா? இப்போதெல்லாம் மின்சாரம் போய்த் திரும்பும் இடைவெளியில் புத்தகம் படிப்ப தென்ன… ஒரு புத்தகமே எழுதி விடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *