கான்பிடன்ஸ் கார்னர் – 4

அணிந்திருந்த ஆடை பெருமளவு

கிழிந்ததால் புத்தாடை பெற்றார் புத்தரின் சீடரொருவர். புத்தருக்கு அவர் தந்த அறிக்கை: “புத்தாடை அணிந்தேன். பழைய ஆடையை படுக்கை விரிப்பாய் போட்டிருக்கிறேன். பழைய படுக்கை விரிப்பை ஜன்னல் திரைச்சீலை ஆக்கினேன். பழைய திரைச்சீலையைக் கிழித்து பாத்திரங்கள் துடைக்கிறேன். பாத்திரங்கள் துடைத்த பழந்துணியைக் கிழித்து விளக்குக்குத் திரியாகப் பயன்படுத்துகிறேன்”.
எதையும் விரயம் செய்யாத
விவேகமே துறவு.

3 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *