பாடப்புத்தகத்தில் இருந்து கேள்விகளைக் கேட்டு பதில்களைச் சொல்ல வைத்தார் ஆசிரியர். பிள்ளைகளுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுத்துவிட்டு, அவர்களிடம் சொன்னார், “ஆனாலும் இது போதாது”. பிள்ளைகளுக்குப் புரியவில்லை. நூறைவிட எப்படி அதிகம் வாங்குவது? ஆசிரியர் சொன்னார், “நான் மதிப்பெண்ணைச்
சொல்லவில்லை. நீங்கள் சொன்ன பதில்களைக் குறிப்பிட்டேன், கல்வி எப்போது வளர்கிறது தெரியுமா? சொல்லித் தந்த பதில்கள் மறந்து போகும் போது – சுயமாக பதில்கள் தோன்றும்போது”
சிந்தித்ததை சொல்வது மட்டுமல்ல கல்வி
சிந்திக்க வைப்பதுதான் சிறந்த கல்வி.
Leave a Reply