கான்பிடன்ஸ் கார்னர் – 3

புத்தர் தன் சீடர்

ஆனந்தருடன் வீதியில் சென்று கொண்டிருந்தார். அவர் நெற்றி மீது ஈ ஒன்று உட்கார்ந்தது. அனிச்சையாகக் கையை அசைத்து ஈயை ஓட்டிவிட்டார் புத்தர். சற்று தூரம் சென்றவர் “சட்”டென நின்றார். கண்களை மூடி, கையை மிக மெதுவாக நெற்றிக்கருகே அசைத்து இல்லாத ஈயை ஓட்டினார். “ஈ முன்பே பறந்துவிட்டதே” என்றார் ஆனந்தர். “தெரியும், ஆனால் அந்த விநாடி அனிச்சையாக ஈயை ஓட்டினேன். ஒரு விநாடி விழிப்புணர்வு தவறி விட்டது. அடுத்த முறை ஈ அமர்கையில் அதனை எப்படி ஓட்டுவதென்று பயிற்சி எடுக்கிறேன்” என்றாராம் புத்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *