வெற்றிக் கொடிகட்டு

M.G. ராஜமாணிக்கம்

ஒரு மனிதன் எப்படி வெற்றிக்கொடி கட்ட முடியும்? அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டுமா? கடினமாக உழைப்பு காரணமாக முன்னேற்ற வேண்டுமா? என்று கேட்டால் கடின உழைப்பு மட்டுமே ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நான் உருவானதற்கு காரணம் அதிர்ஷ்டமா? இல்லவே இல்லை. கடுமையான உழைப்பு மட்டும்தான் காரணம். முயற்சி… முயற்சி… முயற்சி மட்டுமே ஒருவரை முன்னிலைப்படுத்தும்.

நாம் ஒரு பலமாடி கட்டிடத்தின் மேல் தளத்திற்கு செல்ல வேண்டுமென்று வைத்துக் கொள்வோம். அதிர்ஷ்டம் என்பது என்ன தெரியுமா? அந்த மாடிக்கு லிப்டில் செல்வது போன்றது. மின்சாரம் இருந்தால் மட்டுமே லிப்டில் செல்ல முடியும். லிப்டில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட்டால் போய்ச்சேர வேண்டிய தளத்தை அடைய முடியாது. ஆனால் கடின உழைப்பு என்பது நாம் மாடிக்கு மாடிப் படியில் ஏறிச்செல்வது போன்றது. கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும். ஆனால் ஸ்திரத்தன்மை இருக்கும். கடின உழைப்பு மற்றும் முயற்சி என்ற படிக்கட்டுகளின் மூலம் நிச்சயம் நாம் நிர்ணயித்த இலக்கை அடைய முடியும். ஆனால் அதிர்ஷ்டம் என்பது நம் கையில் இல்லை. பிறரைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை. கடின உழைப்பு என்பது நம் கையில் உள்ளது. யாரையும் சாராமல் வெற்றி பெறமுடியும்.

உண்மையிலேயே ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பதுதான் எனது பள்ளிப்பருவ ஆசை. என்னுடைய உறவினர்கள் பலர் காவல் துறையில் பணியாற்றுகிறார்கள். எனது சொந்த ஊர் மதுரை மாவட்டத்திலுள்ள திருவாதவூர். மாணிக்கவாசகர் பிறந்த ஊர் அது. அதனால்தான் எனக்கு ராஜமாணிக்கம் என்று பெயர் வைத்தார்கள்.

மதுரையிலுள்ள போலீஸ் ரிசர்வ் லைனுக்கு வாராவாரம் பள்ளி விடுமுறையில் போய் விடுவேன். என் உறவினர்கள் பலரும் காவல்துறையில் பணி ஆற்றியதால் அடிக்கடி அங்கு செல்வேன். என் மாமா போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை பார்த்தார். அவருடன் காவல் நிலையத்திற்கு நான் செல்லும்போது, என் மாமா உள்ளே நுழைந்தவுடன் சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து ஒரு சல்யூட் போடுவதைப் பார்ப்பேன். உடனே நான், “ஆஹா! சப் இன்ஸ்பெக்டர் மிகப் பெரிய ஆள்” என்று முடிவு செய்வேன்.

சரி, இந்த சப் இன்ஸ்பெக்டர் மாதிரி நாமும் அதிகாரியாக வந்து, மாமாவை நமக்கு சல்யூட் அடிக்க வைக்க வேண்டும் என்று அப்போது நான் முடிவு செய்தேன்! அதை என் மாமாவிடம்,”மாமா! நான் உங்களுக்கே ஆபிஸராக வந்து உங்களையே எனக்கு சல்யூட் போட வைப்பேன்” என்று பலமுறை சொன்னேன். எனக்கு அப்போது ஆறு வயது.

இன்னொரு முறை அதே காவல்நிலையத்திற்குச் சென்றபோது அந்த சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடிப்பதைப் பார்த்தேன். “ஓஹோ இவரு பெரிய ஆளு போல இருக்கு. நாம் இவரைப்போல இன்ஸ்பெக்டராக வரணும்” என்று என் இலக்கை உயர்த்தினேன்.

ஒரு நாள் அந்தக் காவல்நிலையத்தில் இருந்த அனைவரும் பரபரப்பாக இருந்தார்கள். அங்கு அப்போது மாவட்ட போலீஸ் எஸ்.பி. வந்தார். படார், படாரென்று எல்லோரும் சல்யூட் அடித்தார்கள். சரி. இவர்தான் மிகப்பெரிய அதிகாரி என்று முடிவு செய்து இவர் போல ஆக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அன்று குடியரசு தினம். கொடியேற்ற வந்த ஓர் அதிகாரியை வரவேற்க, அப்போது அங்கிருந்த அனைத்து காவல்துறை அலுவலர்களும், அதிகாரிகளும் பரபரப்பாக இருந்தார்கள். அந்த அதிகாரி, அந்த மாவட்டத்தின் கலெக்டர். ஓஹோ கலெக்டர்தான் மிகப்பெரிய ஆபிஸர். நாம் படித்தால் கலெக்டருக்கு படிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தபோது என்னுடைய வயது ஏழு.

ஆனாலும்கூட போலீஸ் டிரஸ் மிடுக்கு, எல்லோரும் அடிக்கும் சல்யூட் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, சரி. ஐ.பி.எஸ். அதிகாரியாக வர வேண்டும் என்று என் முடிவை மாற்றினேன். அந்த வயதில் மதுரை சித்திரைப் பொருட்காட்சியில் ஒரு பிளாஸ்டிக் கடையில் கீ செயினில், எம்.ஜி.ராஜ மாணிக்கம் ஐ.பி.எஸ். என்று அடித்துக் கொடுங்கள் என்று கேட்டேன். உடனே அந்தக் கடைக்காரர் அப்படி எழுதணும்னா மூணு கீ செயின் வேணும் என்று கிண்டல் செய்தார். சரி. எம்.ஜி.ராஜா ஐ.பி.எஸ் என்று அடித்துக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கினேன். எட்டு வயதில் வாங்கிய அந்த கீசெயினை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

நாம் சிறுவயதில் நம் மனதில் என்ன விதைக்கிறோமோ அதுதான் முளைத்து விருட்சமாக மாறும். எந்த மாதிரியான எண்ணங்களை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும். ஆக எட்டு வயதிற்குள் எனக்குள் விதைக்கப்பட்ட விதை, நம்பிக்கை, லட்சியம், இலக்கு எல்லாமே நான் ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்பதுதான்.
அப்போது ஒரு நாள் என் மாமாவுக்கு மதுரை கலெக்டர் பங்களாவில் இரவு பாரா டியூட்டி. நானும் வருகிறேன் என்று அவருடைய சைக்கிளில் கலெக்டர் பங்களாவிற்கு சென்றோம்.

வாசலில் நின்று துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு பாரா டியூட்டி பார்க்க ஆரம்பித்தார். அப்போது கலெக்டரின் கார் வருகிறது. காரின் மேற்புறம் சிவப்புக்கலர் சுழல் விளக்கு சுற்றிக்கொண்டே வந்தது. என் மாமா சல்யூட் அடித்தார். அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. சம்பத் ஐ.ஏ.எஸ். காரில் சென்றார். நானும் சின்னதாக ஒரு சல்யூட் அடித்தேன்.

அப்போது எனக்குள் ஒரு மின்னல். சுழலும் சிவப்பு விளக்கு எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. நாமும் இப்படி ஒரு நாள் காரில் போகும்போது சிவப்பு விளக்கு சுற்றிக்கொண்டு போனால் எப்படியிருக்கும்? யோசித்தேன்… யோசித்தேன்… யோசித்துக்கொண்டேயிருந்தேன்.

இரவில் தூங்கும்போதெல்லாம் கலெக்டர் காரில் சுற்றின சிவப்பு விளக்குதான் கனவில் வரும். திடீரென்று அந்த சிவப்பு விளக்கு காரை விட்டு இறங்கிவந்து என் தலையில் ஏறிக்கொண்டது போல உள்ளுணர்வு. கனவும் அப்படியே வந்தது. முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் சொன்னது போல கனவு காண ஆரம்பித்தேன். அவர் சொன்னது போல, உறக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு என்ற தாரக மந்திரத்தை அப்போதே தலையில் ஏற்றிக்கொண்டேன். இரவு தூங்கும் போதெல்லாம் என் தலையில் சிவப்பு விளக்கு சுற்றிக் கொண்டேயிருக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1993-94இல் அறிவொளி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த இயக்கம் சார்பில் கிராமங்களில் தெரு நாடகங்கள் நடத்துவார்கள். எனக்கு கலைகளில், குறிப்பாக நடிப்பில் ஈடுபாடு உண்டு. பெயரிலேயே எம்.ஜி.ஆர் என்று இருக்கிறதே! அறிவொளி இயக்க ஒருங்கிணைப்பாளர் என்னை சிவகாசிக்கு அழைத்துப்போய்விட்டார். என்னைப் பொறுத்த வரை என்னுடைய முக்கியமான இரண்டாவது காலகட்டம் அது.
ஆம். ஒரு லட்சியத்தை அடைய குறிப்பிட்ட பாதையில் உறுதியோடு பயணம் செய்தால் எதிர்ப் படும் தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக மாறி நமக்கு வழி கிடைக்கும். லட்சியங்கள் எப்படி உருவாகின்றன? என்று நமக்கே தெரியாது.

ஆனால் லட்சிய விதைகள் முளைக்க முயற்சி என்ற நீர் ஊற்றவேண்டும். நாம் லட்சியத்தை அடையப் பயணம் செய்யும்போது இந்தச் சமூகமும் சுற்றுப்புறமும் ஏதாவது ஒரு வகையில் நமக்கு உதவிக்கொண்டே இருப்பார்கள். அதனால்தான் ஏதாவது ஒரு லட்சியத்தோடு இருங்கள் என்று சொல்கிறோம். மனதுக்குள் போடக்கூடிய விதை என்பது பாலைவனத்தில் போடப்படும் விதைமாதிரி. தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. எப்போது தண்ணீர் கிடைக்கிறதோ, அப்போது முளைக்கும் பக்குவம் அந்த விதைகளுக்கு உண்டு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிவகாசி அருகிலுள்ள கிராமங்களில் கல்வி அறிவை வலியுறுத்தி இரவு நாடகங்கள் நடத்தச் சென்றோம். எல்லோருடைய சந்தோஷங் களுக்குள் சிலரின் துக்கங்கள் இருக்கும் என்பது போல, பட்டாசு தயாரிக்கும் மக்களுக்கு இருக்கும் துயரங்கள் எல்லோரும் அறிந்ததே!

பெரும்பாலான ஊர்களுக்கு அப்போது பேருந்து வசதிகள் குறைவு. காலையில் ஒன்று. மாலையில் ஒன்று. இப்படித்தான் இருக்கும். சில கிராமங்களுக்கு எட்டு கிலோ மீட்டர் நடந்து சென்று நாடகங்கள் நடத்தியிருக்கிறோம். இரவு நாடகம் நடத்துவோம். நாடகம் முடிந்து இரவு திரும்ப பேருந்து கிடைக்காது. கிராமங்களில் கிடைக்கும் இடத்தில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் பேருந்து பிடித்து அடுத்த ஊருக்குச் செல்வோம்.

ஒரு நாள் அப்படி ஒரு நாள் காலையில் பேருந்தில் பயணம் செய்தபோது நான் கண்ட காட்சிதான் என் மனதில் ஓர் அழுத்தமான விதையை விதைத்தது. ஒரு சீட்டில் மூன்று சிறுமிகள் பயணம் செய்தார்கள். ஆறு வயது. நான்கு வயது. இரண்டு வயது இப்படி மூன்று சிறுமிகள். ஆறு வயது சிறுமியின் மடியில் இரண்டு வயது சிறுமி. மூன்று பேரும் தூங்கிக்கொண்டே பயணம் செய்தார்கள். நெருங்கி விசாரித்தபோது, “அப்பா குடிகாரர். வேலைக்குப்போக மாட்டார். அம்மாவும் பட்டாசு கம்பெனிக்கு போய்விடுவார்.

நானும் தீப்பெட்டி கம்பெனிக்கு வேலைக்குப் போகிறேன். இரண்டு தங்கைகளையும் வீட்டில் விட்டுவிட்டு வர முடியாது. அதனால்தான் ரெண்டு பாப்பாவையும் தூக்கிக் கொண்டு வந்து விட்டேன்” என்றாள் அந்த ஆறு வயதுக்குழந்தை. என்ன கொடுமை இது?

அந்தப்பிஞ்சுகளின் கைகள் வெந்து கிடந்தன. மனம் பதறி விட்டது. நம் வாழ்க்கையில் இவர் களுக்கு ஏதாவது செய்ய முடியுமா? இந்த அவல நிலையை நீக்க முயற்சி செய்யாமல் நாம் இருப்பது வீண் என்ற முடிவிற்கு வந்தேன். இதுபோன்ற குழந்தைத் தொழிலாளர்கள் பல ஆயிரக்கணக்கில் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற வெறி என்னுள் எழுந்தது.

அப்போதுதான் என்னுடைய லட்சியம் உறுதிப்படுத்தப்பட்டது. நாம் ஆகவேண்டியது ஐ.பி.எஸ். அல்ல ஐ.ஏ.எஸ் என்ற லட்சியத்தை மனதில் உறுதியாக விதைத்தேன்.
லட்சியம் என்பது என்ன? தன்னை யார் என்று அறிந்தால் மட்டுமே வெற்றி கிட்டும். தன்னை அறிதல் என்பதுதான் மிக உயர்ந்த செயல். நாம் கடைப்பிடிக்க வேண்டிய நான்கு விஷயங்கள் என்னவென்றால்,

கர்ர்ந் ஆங்ட்ண்ய்க்: நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தல். இந்நிலையை அடைய உதவியாக இருந்த கடவுளுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.
கர்ர்ந் ஊர்ழ்ஜ்ஹழ்க்: அதுதான் லட்சியம். வாழ்க்கையின் முன்னேற்றப்பாதையில் எப்படிச் செல்ல வேண்டும் என்று திட்டமிடுதல், முன்னேறுதல்.

கர்ர்ந் அழ்ர்ன்ய்க் : உங்களைச் சுற்றிப் பாருங்கள். உலகம் முழுக்க உங்களுக்கான சந்தர்ப்பங்கள் கொட்டிக் கிடப்பதைப் பாருங்கள். அம்பானி, டாடா, அப்துல்கலாம் போன்றவர்கள் ஒரே நாளில் வெற்றியை அடையவில்லை. சந்தர்ப்பங் களுக்காக காத்திருந்து ஜெயிக்கவேண்டும். சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்துபவர்களுக்கே வெற்றி கிட்டும்.

கர்ர்ந் ஐய்ள்ண்க்ங்: இதுதான் தன்னை அறிதல். தன்னை அறிந்து, கடவுளைக் கண்டுபிடித்து கடவுளை நம்பி, கடவுளுக்கு நன்றி செலுத்தும் நிலையது. நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. படித்தபோது தங்கமெடல் வாங்கினேன். நான் படித்து முடிப்பதற்கும் என் அப்பா பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கும் சரியாக இருந்தது. எனக்கு டிசிஎஸ் கம்பெனியில் வருடத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.

ஆனால், என் தலையின் மேல்தான் சிவப்பு விளக்கு சுற்றிக்கொண்டிருக்கிறதே! எம்.இ தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்ததால் கொஞ்ச நாள் லேசாக அதை மறந்திருந்தேன். திரும்பவும் சிவப்பு விளக்கு சுழல ஆரம்பித்து விட்டது. அந்த நேரத்தில் இரண்டு சாய்ஸ்தான் இருந்தது. ஒன்று வேலைக்குச் செல்லவேண்டும். இல்லையெனில், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் செய்ய துவங்க வேண்டும். பணிக்குச் சென்றுகொண்டே ஐ.ஏ.எஸ். படிப்பதென்பது வீண்முயற்சி.

வேலைக்குப் போவதா? ஐ.ஏ.எஸ். முயற்சியா? சரியான இக்கட்டான நிலை எனக்கு. அப்பா ஓய்வு பெற்று விட்டார். அடுத்த மாதம் சம்பளம் கிடையாது. அப்போது மகனாக நான் என்ன செய்யவேண்டும்? என் தந்தை அவருடைய பணியை, ‘அவையில் முந்தியிருப்பச் செயல்’ என்று என்னைப் படிக்க வைத்துவிட்டார். மகனாகிய நான் என்ன செய்ய வேண்டும்? ‘இவன் தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல்’ என்று நான் செய்ய வேண்டாமா?

இந்த இடத்தில் நான் சாய்ஸ் எடுக்க முடிவு செய்தேன். வாழ்க்கை என்பது சான்ஸ் கிடையாது. சாய்ஸ்! எப்படித் தேர்ந்தெடுக்கிறோமோ அப்படித் தான் அமையும். வருடம் ஐந்து லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலைக்குப்போனால் திருமணம், வீடு, இப்படித்தான் அடுத்து நிகழும்.

ஆனால் சிவகாசியில் நான் பார்த்தது போல பல அவலங்களை ஒழிப்பதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தால் மட்டுமே முடியும். சமூகத்திற்கு உதவ வேண்டுமானால் ஐ.ஏ.எஸ். குடும்பத்திற்கு மட்டும் உதவ வேண்டுமானால் டி.சி.எஸ். என்னுடைய சாய்ஸ் ஐ.ஏ.எஸ். என்று முடிவெடுத்தேன். என் தந்தை என்னை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தினார்.

தைரியமாக சாய்ஸ் எடுக்கவேண்டும். வாழ்க்கையின் மிக முக்கியமான கொள்கைகள் எவை தெரியுமா?

இட்ஹய்ஞ்ங் மாற்றம் அஸ்ரீஸ்ரீங்ல்ற் ஏற்றுக்கொள்ளுதல்

1. இட்ஹய்ஞ்ங் ற்ட்ங் ற்ட்ண்ய்ஞ்ள் ஜ்ட்ண்ஸ்ரீட் ஹ்ர்ன் ஸ்ரீஹய்’ற் ஹஸ்ரீஸ்ரீங்ல்ற் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்.

2. அஸ்ரீஸ்ரீங்ல்ற் ற்ட்ங் ற்ட்ண்ய்ஞ்ள் ஜ்ட்ண்ஸ்ரீட் ஹ்ர்ன் ஸ்ரீஹய்’ற் ஸ்ரீட்ஹய்ஞ்ங் உங்களால் மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் வேண்டும்.
வெற்றி மாத்திரமே வாழ்க்கை கிடையாது. வெற்றியைப்போலவே தோல்வியும் நல்லது. ஜெயித்தால் பலம் கிடைக்கும். தோற்றால் அசுர பலம் கிடைக்கும்.

நம் தோல்விகள்தான் நமக்கு சிறந்த ஆசான். மீண்டும் மீண்டும் எதைச் செய்யக் கூடாது என்பதை நமக்கு கிடைக்கக்கூடிய தோல்விகள்தான் உணர்த்தும். நானும் மூன்று முறை தோற்றுப்போய்த்தான் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றேன்.
ஒருவர் வெற்றிபெற முடியவில்லை என்றால் அவருக்கு அடுத்த வாழ்க்கை காத்திருக்கிறது என்று அர்த்தம்.

என்னோடு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய என் நெருங்கிய நண்பன் தேர்ச்சி பெறவில்லை. ஆனால் அவர் இப்போது பெரிய அளவில் சம்பளம் வாங்கக்கூடிய வேலையில் இருக்கின்றார். ஆக தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்ட வெற்றியே.

விழும்போது விதையாக விழவேண்டும்.
எழும்போது மரமாக எழவேண்டும்.

லட்சியங்களை உயர்ந்தாகக் கொள்ளல் வேண்டும். உயர்ந்த லட்சியங்கள் மட்டுமே நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். 8848 அடிக்கு மேல் எவரெஸ்ட் சிகரம் உள்ளது. ஓர் உன்னத லட்சியத்தோடு முயற்சியோடு மனிதன் எவரெஸ்ட் மேல் ஏறுகிறான். ஏறி நின்றவுடன் அவனுடைய காலடியில்தானே எவரெஸ்ட் இருக்கும்?

ஆக மனிதன் லட்சியத்தோடு போராடி னால் எவரெஸ்ட்டும் நம் காலுக்கு கீழ்தான் இருக்கும். நான் ‘2 வரை தமிழ் வழிக்கல்வி படித்தேன். ஆனால் மொழியால் வந்த தடைகளைத் தகர்த்தெறிந்தேன். தொடர் முயற்சிகளால் ஊக்கம் பெற்றேன்.

உயர்ந்த லட்சியம்
இடைவிடாத முயற்சி
இடைவிடாத பயிற்சி

இவைதான் நம் வெற்றிக்கான பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும். எளிதில் எந்த வெற்றியும் கிடைக்காது.

சுடர் விடவேண்டுமா? சூடுபட வேண்டும்.
வலிமை பெறவேண்டுமா? வலிதாங்க வேண்டும்.
சுடுதல் இன்றி சுடர்விட்டவர் யாருமில்லை….
வலியின்றி வலிமை பெற்றவர் யாருமில்லை….
உயர்ந்த லட்சியத்தோடு போராடுங்கள்.

வெற்றி நிச்சயம்.

அரங்கிலிருந்து சிவகுருநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *