இன்னொரு தடவை சொல்லுங்க!

நீங்கள் எதையாவது சொல்லி, யாராவது இப்படிக் கேட்டார்கள் என்றால், நீங்கள் உங்களைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்று அர்த்தம். வேறொன்றுமில்லை. “என்ன சொன்னீங்க” என்று யாரும் கேட்டால், நீங்கள் சொன்ன விஷயம் தெளிவாகப் புரியவில்லை என்பது தெளிவாகிறது. சொல்ல விரும்பியதை சரியாகவும் சரளமாகவும் சொல்லத் தெரிந்தால்தான் வெற்றிக்கான வாசல் திறக்கும்.