அன்று சொன்னவை..! அர்த்தமுள்ளவை!!
– வழக்கறிஞர் த. இராமலிங்கம் தொலைக்காட்சி ஒன்றில், நகைச்சுவை நடிகர் ஒருவர், ஒரு துணுக்கினைச் சொல்லிவிட்டு, அவரே சிரித்துக் கொண்டிருந்தார். தற்செயலாக அதைப் பார்க்க நேரிட்டபோது, நகைச்சுவையை விட, ஆழமான ஒரு செய்தி அந்தத் துணுக்குக்குள் மறைந்திருப்பதாகவும், அது நகைச்சுவை என்னும் நீரில் கரைந்து போவதாகவும் பட்டது. அதை நம் பார்வையில் பார்க்கலாம். கணவன், மனைவி … Continued
படம் சொல்லும் பாடம்
எந்த திசையில் பறந்தாலும் பிடிக்க முயன்றால்.. கனவுகளை கைவிட தேவையேயில்லை. இலக்கின் மீதான பார்வை விலகுகிற போது தான் தடைகள் தெளிவாக தெரிகின்றன.
அறிய வேண்டிய ஆளுமைகள்
– மரபின் மைந்தன் ம. முத்தையா கனவுகளால் ஆனதுதான் அந்த மனிதனின் வாழ்க்கை. ஆனால் மிகுந்த தீவிரத்தோடும் தெளிவோடும் அந்தக் கனவுகளை அவர் எட்டிப் பிடித்ததால் அவை இலட்சியங் களாயின.” இப்படி வர்ணிக்கப்பட்டவர், வால்ட் டிஸ்னி. குழந்தைகள் உலகின் கற்பனைப் பாத்திரங்களை படைத்துக் கொடுத்த பிரம்மா. அவரே ஒரு முறை சொன்னார். “உண்மையான படைப்பாற்றல் கனவு … Continued
ஆபத்திலும் சோகத்திலும் கூட…
– சோம. வள்ளியப்பன் ‘உங்களுக்குள் கற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருந்தால் போதும். சொல்லித் தருவதற்கு எல்லா இடத்திலும் எந்நேரமும் ஆசிரியர்கள் தோன்றுவார்கள்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. மார்ச் மாதம் 11ம் தேதி. மதியம் 2.46 மணி. ஜப்பானின் மேற்காக, பசிபிக் மகாசமுத்திரத்தில், கடலுக்கு அடியில் 34 கி.மீ ஆழத்தில், சுமார் ஆறு நிமிடங்கள் வரை … Continued
கல்யாணப் பரிசு
யுத்தம் செய்யாத தம்பதிகள் – கிருஷ்ண வரதராஜன் உலகிலேயே அதிக சண்டைகள் நடக்கும் இடம் எது? ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, இஸ்ரேல் என்று பட்டியலிட்டு விடாதீர்கள். ஏனெனில் உலகிலேயே அதிக சண்டைகள் நடக்கும் இடம் வீடுதான். இங்கே வார்த்தைகள்தான் ஆயுதங்கள். சில பேர் காயப்படுத்துவதற்காக, வார்த்தைகளை ஆயுதங்களாக பயன்படுத்துவார்கள். சிலர் தன்னை தற்காத்துக்கொள்வதற்காக வார்த்தை ஆயுதத்தை கையில் … Continued
புது வாசல்
நம்பிக்கை மேல் நம்பிக்கை ஒரு நாட்டின் அரசருக்கு, அவரது ஒற்றன் ஒரு அவசர செய்தியை கொண்டு வந்திருந்தான். “தலைமை மருத்துவர் தங்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுவந்து கொண்டிருக்கும் மருந்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது.” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே அரண்மனை வைத்தியர் வந்துவிட்டார். ஒற்றன் கண் ஜாடை காட்டினான், ‘அரசே இம்மருந்தை சாப்பிடவேண்டாம் இதில்தான் விஷம் கலந்திருக்கிறது.’
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6
கடுமையான பாலைவனத்தில் முகாமிட்டிருந்தார் அந்த ராணுவவீரர். அவருடைய மனைவியும் உடன் சென்றிருந்தார். தகிக்கும் வெய்யிலையும் எங்கும் வீசியடிக்கும் அனலையும் மணலையும் அவரால் தாங்க முடியவில்லை. தன் தந்தைக்குக் கடிதம் எழுதினார். அவர் தந்தை பதிலெழுதினார்.
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5
யார் வழி நடத்த வேண்டும், யார் வழி நடக்க வேண்டும் என்கிற பிரச்சினை, அலுவலகம் ஒன்றில் அடிக்கடி எழுந்தது. இந்த சிக்கல் மேலதிகாரியின் கவனத்திற்கு சென்றது. சம்பந்தப்பட்ட அனைவரையும் ஓரிடத்தில் அமர வைத்த அதிகாரி, அறைக்குள் அங்கு மிங்கும் வேகமாக நடந்துவிட்டு, “புரிகிறதா?” என்றார்.
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4
குளிர் நிரம்பிய பொழுதொன்றில் காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது. புன்னகை முகத்துடன் பெண்மணி ஒருவர், “என்ன பார்க்கிறாய்” என்று கேட்டார். “எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக்
கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3
இரவு வேளைகளில் தன்னை ஒரு பேய் துரத்துவது போன்ற கனவு அந்த மனிதனுக்கு அடிக்கடி வந்தது. பகலில் அந்தக் கனவைப் பற்றி நினைத்தாலே உடல் நடுங்கும். அவ்வளவு மோசமான கனவு அது. ஒருநாள் அதே கனவு. அதே பேய். இப்போது கனவில் அந்தப் பேய், அந்த மனிதனின் மிக அருகே வந்துவிட்டது. அந்த மனிதன் கேட்டான், … Continued