பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்

உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன் உரையாடுகிறார்கள்.. இந்த மாதம் கபிலன் வைரமுத்து நம்பிக்கை நொடிகள் பக்கங்களில் இடம் பெறுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டபோது பல காட்சிகள் விரிந்தன. சாதனை படைத்த ஒரு நபராக இல்லாமல், தன் வண்ணப் பந்தைத் தவறவிட்டு தவறவிட்டு துரத்திக் கொண்டோடும் குழந்தையைப்போல இலட்சியங்களை … Continued

வண்ணப் பலகையல்ல வரலாற்று கல்வெட்டு

வளரும் சிகரங்கள் குடந்தையில் தொடங்கிய இளந்தளிர் இயக்கம் கும்பகோணம் சீமாட்டி ரெடிமேட்ஸ் நிறுவனம் விடுத்த அழைப்பின் பேரில் பெற்றோர் களுடன் வந்து குவிந்த குழந்தைகள் முகங்களில், அரங்கில் நுழைந்ததுமே மின்னலிட்டது மகிழ்ச்சி. அவர்களுக்கான இருக்கைகளில், அவர்களுக்கு முன்னரே அமர்ந்திருந்தன சில அழகிய பைகள். உள்ளே குழந்தைகளுக்கு விருப்பமான தின் பண்டங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அழகிய நாப்கின், … Continued

வெற்றிப்பாதை

– இயகோகா சுப்பிரமணியன் இருக்கையில் அமர்ந்து, ஆணைகள் ஓச்சி, ஒரு சிலர் வென்றிடலாம்; இறங்கிப் பழகி அன்புடன் அணைத்தால் என்றும் நிலைத்து நின்றிடலாம். இந்தக் கட்டுரையை நான் எழுத ஆரம்பிக்கும்போது, தமிழக அரசியல் களத்தில் கூட்டணிக்கூத்துக்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த மகா கேவலமான ஜனநாயகத் தாழ்வைப்பற்றி விமர்சிக்க நிறைய ஊடகங்கள், விமர்சகர்கள் உள்ளனர். நாம் கவனிக்க … Continued

உங்களுக்குத் தெரியும் என்பது தெரியுமா?

– பாவை வித்யாஷ்ரம் அறிமுக விழாவில் டாக்டர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். அந்தப் பேராசிரியரின் பெயர் ராமசாமி. கல்லூரியின் என்.சி.சி அலுவலரும்கூட. “பாபு! என்னை அறையில் வந்து பார்!” என்றந்த மாணவனை அழைத்ததில் மாணவர் பதறிப் போனார். கல்லூரி மாணவர்களைக்கூட கை வைக்கும் அளவு கண்டிப்பான ஆசிரியர் அவர். அறையில் வைத்து அறை கொடுப்பாரோ என அஞ்சியபடியே … Continued

கல்யாணப் பரிசு

– கிருஷ்ண வரதராஜன் ஒரு திருமண நாளில் எங்கள் திருமணத்திற்கு வந்த பரிசுகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தோம். நண்பரொருவர் தந்த ஒரே மாடலில் அமைந்த டைட்டன் வாட்சுகள்தான் பட்டியலில் முதலில் இருந்தது. “இவர்கள் கணவன் மனைவி என்று எல்லோருக்கும் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் ஒரே மாடலில் வாங்கிக் கொடுத்தீர்களா?’ என்றேன். “லேடீஸ் வாட்ச் அளவில் சிறியது. … Continued

வெற்றிக்கொடி கட்டு

திருச்சியில் 20.02.11 அன்று நடைபெற்ற சிகரம் உங்கள் உயரம் நிகழ்ச்சியில் கேரள மாநிலம் தொடுபுழா காவல் உதவிக்கண்காணிப்பாளர் திருமதி ஆர். நிஷாந்தினி ஐ.பி.எஸ் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். திருமதி ஆர். நிஷாந்தினி ஐ.பி.எஸ் அவர்கள் திருச்சி அருகிலுள்ள மண்ணச்ச நல்லூர் என்ற ஊரில் பிறந்து அங்குள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் … Continued

இந்திய ஜனாதிபதியாவேன்..

தொழிலதிபர் முகமது இலியாஸ் அதிரடி பேட்டி உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால்? என்னுடைய பிறந்த ஊர் தற்பொழுது வ.உ.சி மாவட்டத்திலுள்ள வல்ல நாடு என்ற குக்கிராமம். என்னுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். அதில் முதல் ஐவர் ஆண்கள் கடைசி இருவர் பெண்கள். நான் என்னுடைய பெற்றோருக்கு நான்காவது ஆண் மகன். என் பிறந்த தேதி 21-09-1959. … Continued

அறிய வேண்டிய ஆளுமைகள்

posted in: Namadhu Nambikkai | 0

– மரபின் மைந்தன் ம. முத்தையா தாதா வாஸ்வானி ஒவ்வோர் ஆண்டும் முறையாகப் படித்து முன்னேற வேண்டுமென்ற கனவுடன் தான் அந்த சிறுவனைப் பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால் பல வகுப்புகளில் தொடர்ந்து டபுள் புரமோஷன். 17 வயதிலேயே கல்லூரித் தேர்ச்சி. எம்.எஸ்.சி. படிக்கும்போது அந்த மாணவன் மேற்கொண்ட ஆய்வைத் திருத்தியவர், நோபெல் பரிசுபெற்ற மாமேதை சர்.சி.வி.இராமன். … Continued

மாற்றங்களின் பலம் மகத்தானது

– வினயா சாதாரண மனிதர்களுக்கும் சாதனை மனிதர்களுக்குமான வேறுபாடுகளைப் பலரும் பலவிதமாகப் பட்டியலிடுவார்கள். அவற்றில் முக்கியமான ஒன்று உண்டு. நாளை செய்ய வேண்டியதை நேற்றே செய்து முடித்தவர்கள் சாதனையாளர்கள். நான்கு நாட்களுக்கு முன்னர் செய்திருக்க வேண்டியதை இன்னும் செய்யாதவர்கள் சாதாரண மனிதர்கள். ஒரு கட்டிடத்தை உருவாக்கியவர்கள் காலத்துக்கேற்ற மாற்றங்களை அவ்வப்போது செய்து வருவதன் மூலம், நிகழ்காலத்துக்கு … Continued