ஆயிரம் ஆயுதம்!

– இயகோகா சுப்பிரமணியன் சிகரத்தில் கொடியை நாட்டிய பிறகு நின்றவர் யாரும் கிடையாது – வேறொரு சிகரம் தேடிச் செல்லாமல் வாழ்க்கைப் பயணம் முடியாது!

சிந்தனை செய் மனமே…

– இரா. கோபிநாத் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாம் உள்வாங்கும் தகவல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நமது எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம். எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நமது செயல்களைக் கட்டுப்படுத்தலாம், செயல்கள் மூலமாக விளைவுகளைக் கட்டுப்படுத்தலாம், வெற்றியடையலாம்.

வெற்றிப் பாதை : எண்ணத்தை சீரமைத்தால் வாழ்க்கை சீராகும்

– விழா அரங்கிலிருந்து பாணபத்திரன் நமது நம்பிக்கை மாத இதழும் பி.எஸ்.ஆர். சில்க் சாரீஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் வெற்றிப்பாதை’ பயிலரங்கின் முதல் நிகழ்ச்சி கடந்த 17.07.2005 ஞாயிறு அன்று கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள தாமோதர் அரங்கில் நடைபெற்றது.

என் அமெரிக்கப் பயணம்

– மரபின் மைந்தன் ம.முத்தையா நகர்ந்து கொண்டிருப்பது நதியின் இயல்பு. பயணம் செய்வது மனித இயல்பு. இந்தியச் சமய மரபில் பயணம் என்பது ஆன்மீக வளர்ச்சியின் அம்சம். கங்கை, காவிரி, கன்யாகுமரி என்று பல இடங்களுக்கும் பயணம் செய்து, எல்லா இடங்களும் இறைவனின் இருப்பிடம் என்பதை உணரச் செய்வதற்காகவே தீர்த்த யாத்திரைகள் சமயத்தின் பெயரால் செய்யப்பட்டன.

காற்று வீசுது

– மரபின் மைந்தன் ம.முத்தையா காற்று வீசுது உன் பக்கம் – நீ கண்கள் மூடிக் கிடக்காதே! நேற்றின் தோல்விகள் போகட்டும் – இந் நாளை இழந்து தவிக்காதே!

துணிச்சல் இன்றி வெற்றி இல்லை

திரு. கே.கே. இராமசாமி நிறுவனர் – ஷார்ப் பம்ப்ஸ், கோவை ஷார்ப் இந்தப் பெயர் பம்ப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப உலகில் வலிமையான முத்திரை பதித்திருக்கிறது. மிக எளிய நிலையில் வாழ்வைத் தொடங்கி இன்று சர்வதேச அளவில் செயல்படும் தொழில் நிறுவனமாய் இதனை வளர்த்தெடுத்திருப்பவர் ஷார்ப் மற்றும் ஃபிஷர் பம்ப் நிறுவனங்களின் நிறுவனர் திரு.கே.கே.இராமசாமி. அவருடன் உரையாடினோம்.

சோப் போடலாம் வாங்க!….

– சினேகலதா விசுவரூபம் எடுத்து நிற்கும் விஞ்ஞான யுகத்தில், நம் மனதில், நம்மையும் அறியாமல் ஒரு பெருமை தோன்றும். அடடா! செல்ஃபோன் வந்தாச்சு! ஈமெயில் வந்தாச்சு! குளோனிங் கூட வந்தாச்சு! சும்மா கற்கால மனுஷன் மாதிரி குகைக்குள்ளே வாழாம புதுசு புதுசா எத்தனை கண்டுபிடிச்சிருக்கோம்!

பொதுவாச் சொல்றேன்

– புருஷோத்தமன் இந்த அவசரமான யுகத்திலே, எல்லா விஷயங்களுக்கும் ஆள் வைச்சுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கு. இது ஒரு பக்கம். பணக்கார வீடுகளிலே, குழந்தைகளைப் பார்த்துக்க ஆயாக்களையோ வேலைக்காரங்களையோ நியமிக்கிறாங்க.

சந்தைப் படுத்துவோம்! சாதனை குவிப்போம்!

– தி.க. சந்திரசேகரன் ஒரு பொருளை மிகச் சிறப்பாக உற்பத்தி செய்யலாம்; நல்ல தரம், நியாயமான விலை, மக்களுக்குத் தேவைப்படும் பொருள் என அந்தப் பொருள் சிறப்பான பொருளாகக் கூட அமையும். ஆனாலும் அந்தப் பொருள் மக்களை சென்றடையாத வரையில் எந்த ஒரு பயனுமில்லை!

மகிழ்ச்சியே மனித இயல்பு

– ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்றைய வாழ்வின் பரபரப்பான நிமிடங்களே மனிதனை ஆன்மீகம் நோக்கி ஆற்றுப்படுத்துகின்றன. விஞ்ஞான யுகத்தின் விரைவான பயணத்தில் மெய்ஞ்ஞானம் தனக்கேயுரிய ஈர்ப்போடு திகழ்கிறது. இது குருமார்களின் யுகம்.