நமது பார்வை

எண்ணெய் வளம் இல்லை இந்தத் திருநாட்டில்…

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்று யாராவது கேட்டால் எண்ணெய் வளம் இந்தத் திருநாட்டில் என்று எளிதாகச் சொல்லி விடலாம். சர்வதேசச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக எரிபொருள் விலை அடிக்கடி ஏறுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஒரு மனிதனின் அன்றாட வளர்ச்சியில் அடிப்படையான ஒன்று, பயணம். நடுத்தர வர்க்கம் போடும் மாதாந்திர பட்ஜெட்டில் எரிபொருளுக்கென்று ஒதுக்கும் தொகை கணிசமாக ஏறுகிறது. இது சராசரி வாழ்க்கையின் வாங்கும் சக்தியை விட்டு விலகிச் செல்கிறது.

மத்திய அரசின் கூட்டணி கட்சிகளே விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்துவது வேதனை கலந்த வேடிக்கை. மக்களை நேரடியாகப் பாதிக்கும் இதுபோன்ற பிரச்சினைகளில் அடிப்பது போல் அடிக்கிறேன், அழுவது போல் அழு என்கிற நிலைப்பாட்டை மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகள் எடுக்கின்றன. மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *