இசைமேதை தான்சேனைவிட சிறந்த பாடகர் உலகில் இல்லை என்பது அரசர் அக்பரின் அபிப்பிராயம். பணிவோடு மறுத்த தான்சேன், தன் குரு ஸ்ரீஹரிதாஸ் இன்னும் இனிமையாகப் பாடுவார் என்றார். அவரது இசையைக் கேட்க அக்பரை விருந்தாவனுக்கு அழைத்துப் போனார். ஸ்ரீஹரிதாஸின் இசையில் லயித்த அக்பர், அதன் இனிமைக்கான
காரணத்தை, தன் அரசவைக்கவிஞர் தான்சேனிடம் கேட்டார். தான்சேன் சொன்னார், “நான் ஒரு நாட்டின் அரசனுக்காகப் பாடுகிறேன். அவர் பிரபஞ்சத்தின் அரசனுக்காகப் பாடுகிறார்”. பெரிய குறிக்கோள்களே நம்மைப் பெரியவர்களாக்கும்.
Leave a Reply