எல்லாக் கனவுமே எட்டும் தொலைவிலே!

பெங்களூரில் அந்தப் பெண்மணி, தன்வீட்டு கார்ஷெட்டில் தன் கனவு நிறுவனத்தைத் தொடங்கினார். தொழிற்சாலைகளுக்கும் பயன்படும் என்ஸைம்களை உற்பத்தி செய்வது அவருடைய விருப்பம். வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பித்தார். 1970களில் என்ஸைம் என்றால் என்னவென்று பலருக்கும் தெரியவில்லை.

வங்கிகள் கடன்தர மறுத்தன. பிறகு விசித்திரமான ஒரு நிபந்தனையையும் விதித்தன. ஆண்கள் யாராவது உத்திரவாதம் தந்தால் கடன் தருவதாகக் கூறின. ஒரு பெண்ணுக்குக் கீழே பணிபுரியக்கூட அன்று ஆண்கள் தயாராக இல்லாத நிலையில் உத்திரவாதம் யார் தருவார்?

விடாப்பிடியாய் போராடினார் அந்தப் பெண்மணி. 2004ல் அந்நிறுவனம் பொதுப்பங்குகளை அறிவித்தது. முதல் நாளே 1.1 பில்லியன் டாலர்களுக்கு பங்குகள் விற்றன. இன்று இந்தியாவிலேயே மிகவும் பணக்காரப் பெண்மணி அவர்தான். பெயர் கிரண் மஜீம்தார். தொடங்கிய நிறுவனம் ஃபயோகான்.

உறுதி மட்டும் இருந்தால் போதும்!

கருதிய வாழ்க்கை கைகூடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *