வேலைக்கு ஆட்கள் தேவையில்லை
காய்கறி மார்க்கெட்டில் கத்திரிக்காய் விற்கும்போது பார்த்திருக்கிறீர்களா? போட்டி போட்டுக் கொண்டு விற்பார்கள். “கிலோ இருபது ரூபாய்” என்று ஒருவர் கத்திக்கொண்டிருந்தால், எதிரில் இருப்பவர், “கிலோ பத்தொன்பது” என்று இன்னும் சத்தமாய் கத்துவார். அதுவும் நேரம் நேரம் ஆக ஆக, அடுத்த நாள் வைத்து விற்க முடியாத காய்கறியாய் இருந்தால் இன்னும் விலை குறைந்து கொண்டே இருக்கும். … Continued
நீங்கள் வேலைபார்க்கும் நிறுவனத்தில் தலைவராகத் தயாராகுங்கள்..!!
– கிருஷ்ணன் நம்பி இந்தக்கதை உங்கள் கதையாக இருக்கக் கூடாது என்ற பிரார்த்தனையோடு படிக்கத் துவங்குங்கள். தமிழ்நாட்டிலிருந்து டெல்லி செல்லும் அந்த ரயிலில்தான் திருவாளர் டென்ஷன் அமர்ந்திருந்தார். அவரைப்பற்றி தெரியாததால் அவரோடு பயணம் செய்த எல்லோரும் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்கள். விக்கல் எடுத்த ஒருவர், திருவாளர் டென்ஷன் மினரல் பாட்டில் வைத்திருப்பதை பார்த்துவிட்டு, “சார் கொஞ்சம் … Continued
உங்களை விளம்பரம் செய்யுங்கள்
– சாதனா இப்படியும் சில விளம்பரங்கள் தமிழில் வெளிவரும் செய்தித்தாள்களை பார்க்கும்போது ஏதோ ஒரு விளம்பர இதழ் போலவே தெரியும். காரணம் முதல் பக்கம் முழுவதும் விளம்பரமாக இருக்கும். சின்ன ஒரு கட்டத்தில் தலைப்பு செய்தியின் இரண்டு பாராக்களை போட்டுவிட்டு தொடர்ச்சி மூன்றாம் பக்கம் பார்க்க என்று போட்டிருப்பார்கள்.
பிஸினஸ்ல பின்னுங்க
– கிருஷ்ண வரதராஜன் பில்கேட்ஸின் பிஸினஸ் அட் தி ஸ்பீடு ஆஃப் தாட்ஸ் புத்தகத்தை கடந்த வாரம் மறு படியும் படித்தேன். அந்தப் புத்தகம் எனக்குப் பிடித்துப் போனதற்கு அதன் தலைப்பும் ஒரு காரணம், ‘எண்ணங்களின் வேகத்திற்கு வணிகம் செய்யுங்கள் ‘. வணிகத்தைப் பொறுத்தவரை, ‘இதை நாம் செய்யலாமா’ என்று புதிய ஐடியா ஒன்றை நீங்கள் … Continued
ஓர் அன்னையின் கனவு
– சுகி சிவம் அப்போது காயத்ரிக்கு வயது மூன்று அல்லது நான்கிருக்கும். அழைப்பு மணி அடித்தது. பிஞ்சுக் கைகளால் கதவைத் திறந்த பிள்ளை திரும்ப உள்ளே வந்தபோது, யார் மணியடித்தது என்று கேட்டார் அப்பாயி. ‘போஸ்ட்மேன்’ என்று ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. உடனே ஓர் அறை விழுந்தது அந்தக் குழந்தைக்கு. போஸ்ட்மேன் அண்ணா என்று … Continued
ஆயிரம் சிறகுகள் முளைத்தன
– சிந்தனை கவிஞர் கவிதாசன் எனது முதல் கவிதை நூல் நனவுகளும் கனவுகளும் தலைப்பிரசவ வேதனையோடு 1983இல் வெளிவந்தது. நிகழ்காலத்தின் அவலங்களின் அழு குரல்களோடு எதிர்காலத்தின் நம்பிக்கைக் கீற்று களும் ஏக்கப் பெருமூச்சுகளும் அதில் கவிதைகளாக அரங்கேறி இருந்தன. சிற்பியில் விழுகின்ற மழைத்துளி முத்தாக மாறுவதைப்போல, நெஞ்சின் ஆழத்தில் விழும் சமுதாயப் பதிவுகளும் எதிர்பார்ப்புகளும் கவிதை … Continued
வாழ நினைத்தால் வாழலாம்!
ருத்ரன் பதில்கள் நான் நேர்மறையில் சிந்திக்கிறேன். என் மனைவி எதிர்மறையில் சிந்திக்கிறாள். எனக்கென்று ஓர் இலக்கு வைத்திருக்கிறேன். அவள் இலக்கில்லாமல் இருக்கிறாள். மனைவிக்கு இலக்கை எப்படி உருவாக்குவது? அவளை எப்படி நேர் மறையாக சிந்திக்க வைப்பது? இதையே அவர்கள் சொல்லலாம். இவையெல்லாம் அவரவருடைய கண்ணோட்டம்தான். திருமணமான ஆரம்ப நாட்களில் இந்த சிக்கல்கள் வருவதில்லை. குடும்ப கௌரவம், … Continued
உளிகள் நிறைந்த உலகமிது!
அறிமுகங்கள்! அனுபவங்கள்! ஆளுமைகள்! ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள். எழுதிய கையும் அப்படித்தான். விளம்பர எழுத்தாளராய் வாழ்வை நடத்துவது ஒரு வகையில் சுகமானது. ஒற்றைப் பொறி தட்டி ஒரு கருத்துரு தோன்றிவிட்டால் நல்ல பணம். சிரமமில்லாத வேலை. பிடி கிடைக்கும் வரை பிடிவாதமாக இருந்துவிட்டால் நிலைகொண்டு விடலாம். இந்த நம்பிக்கை ஆழமாக இருந்தது. … Continued
பொருளோடு வாழ்கிறீர்களா?
– ருக்மணி பன்னீர்செல்வம் இந்தக் கேள்வியானது இருபொருள்பட அமைந்ததுதான். உங்களுடைய வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாய், பொருள்பொதிந்ததாய் கட்டமைத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்பது ஒன்று. இன்றைய தேவை மட்டுமல்லாது எதிர் காலத்திற்கான தேவைகளுக்கும் பணத்தட்டுப்பாடு ஏற்படாதவண்ணம் முன்னேற்பாடுகள் செய்து வைத்து செல்வத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கி றீர்களா? என்பது மற்றொன்று.
உஷார் உள்ளேப்பார்
– சோம வள்ளியப்பன் வெற்றிக்கான, மகிழ்ச்சிக்கான பல்வேறு விஷயங்கள் நமக்கு உள்ளேயே இருக்கின்றன. அங்கே சரி செய்து கொண்டுவிட்டால் போதும். எல்லாம் சரியாக இருக்கும். உள்மன ஒழுங்கு, சிந்தனை நேர்த்தி, பார்வை மாற்றம் என்று எவ்வளவோ செய்யமுடியும். செய்தவர்கள் வென்றிருக்கிறார்கள். மனதின் மாபெரும் சக்தி பற்றியும் அது செய்யும் பல மாயங்கள் பற்றியும் உஷார் உள்ளே … Continued