கான்ஃபிடன்ஸ் கார்னர்-1

தன் கணவனை திடீர் மாரடைப்பில் பலிகொடுத்த அந்த ஆசிரியை, வாழ்வின் நுட்பத்தை அந்த இழப்பில் உணர்ந்தார். ஒரு வாரத்திற்குப் பிறகு வகுப்பில் மாணவர்களிடம் சொன்னார், “வாழ்க்கை என்பதே நேசிப்பதற்கும், உணர்வதற்கும், பகிர்வதற்கும் தரப்பட்டுள்ள வாய்ப்பு. இது எத்தனை காலம் நீடிக்குமோ தெரியாது. ஒவ்வொரு நாளும் வாழ்வின் சில அழகான அம்சங்களை உணருங்கள்.

காற்றில் தவழும் நறுமணம், கண்களில் தென்படும் பூக்கள், எங்கோ கேட்கும் இசை, கடந்து போகும் குழந்தை, எல்லாவற்றையும் நேசியுங்கள்” என்றார். அதன்பிறகு வாழ்க்கை அனுபவமே புதிதாக இருப்பதை உணர்ந்த அவரின் மாணவர்கள், உயிர்ப்பும், அன்பும் நிறைந்த மனிதர்களாய் மலர்ந்தார்கள். வாழ்வென்னும் பாடத்தைப் புரியவைத்த அந்த ஆசிரியையை நாளெல்லாம் நினைவில் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *