சிகரம் தொடப்போகும் சின்னப் பூக்கள்

சிகரம் உங்கள் உயரம் சார்பில் மாணவர்கள் மேம்பாட்டுக்குக்கான வளரும் சிகரங்கள் தொடக்க விழா கோவையில் ஜுன் 5 ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. பாலரிஷி ஸ்ரீ விஸ்வசிராஷினி, பேரா. பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் மரபின்மைந்தன் முத்தையாவின் குறிப்புரைகளுடன் கூடிய அருளும் பொருளும் தரும் திருப்பதிகங்கள் மற்றும் கான்ஃபிடன்ஸ் கார்னர் நான்காம் பாகம் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

விஜயா பதிப்பகம் பதிப்பித்த இந்நூல்களை பாலரிஷி ஸ்ரீ விஸ்வசிராஷினி வெளியிட பெரிய லாலா கார்னர் ஸ்வீட்ஸ் திரு.அ.மாரியப்பன், பூர்ணிமா ஏஜென்சீஸ் திரு.ராமலிங்கம் பெற்றுக் கொண்டனர்.

ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளரும் சிகரங்கள் அமைப்பில் உறுப்பினர்களாக்கி மகிழ்ந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *