உஷார் உள்ளே பார்
– சோம. வள்ளியப்பன் -தொடர் ஒரு அரசு நிறுவனத்தில் சக்தி வாய்ந்த பதவியில் இருந்த ஒரு நல்ல மனிதர் அவர். பொதுக் காரியங்களில் ஈடுபாடு கொண்டவர். பலருக்கும் தாரளமாக உதவியவர். பல சாதாரண பின்புலம் இல்லாத மனிதர்களுக்கும்கூட தகுதி அடிப்படையில் வாய்ப்புகள் கொடுத்தவர். என்ன காரணமோ தெரியவில்லை. ஒரு முறை அவரைப்பற்றி ஒரு பத்திரிகையில் யாரோ … Continued
நேற்று இன்று நாளை
– இசைக்கவி ரமணன் இதுவொரு காலம் அதுவொரு காலம் அடியில் மணலாய்க் கரைகிறதே அதுதான் உண்மைக் காலம் இரவும் பகலும் புகையென நீளும் நெஞ்சில் எங்கோ கனல்கிறதே அதுதான் உண்மையில் வாழும்! காலம் என்றால் என்ன? சென்றுவிட்ட நேற்றா? சென்று கொண்டிருக்கின்ற இன்றா? வந்து செல்லப் போகிற நாளையா? இன்று என்றால் இன்றில் எந்தப் பொழுது? … Continued
அறிய வேண்டிய ஆளுமைகள்
– மரபின் மைந்தன் ம. முத்தையா மனிதகுல வரலாற்றை மாற்றியமைத்த ஆப்பிள்கள் மூன்று. ஆதாம் ஏவாள் கண்ட ஆப்பிள். ஐசக் நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள். மூன்றாவதாக ஸ்டீவ் ஜாப்ஸ் கணினி உலகுக்குத் தந்த ஆப்பிள். கடவுளின் உலகத்தில் மட்டுமல்ல, கம்ப்யூட்டர் உலகத்திலும் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாகி விட்டதுதான் ஆச்சரியம். ‘கம்ப்யூட்டர்’ என்கிற சொல்லை உச்சரிக்க … Continued
ஜவஹர்லால் நேரு – வாசிப்பில் நேசிப்பு
ஜவஹர்லால் நேரு- – வாசிப்பில் நேசிப்பு ழந்தைகளால் மட்டுமின்றி குவலயத்தாலும் பெரிதும் நேசிக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேரு வாசிப்பில் வல்லவராகத் திகழ்ந்தார். அவர் லிஃப்டில் பயணம் செய்த பொழுதொன்றில் மின்வெட்டு காரணமாய் லிஃப்ட் நின்று விட்டது. தொழில்நுட்பம் பெருகியிராத அந்தக் காலத்தில் கதவைத் திறக்க நேரமாகிவிட்டது. வியர்வையில் குளித்தபடி வெளியேவந்த நேரு அமைதியாகச் சொன்னாராம், “இங்கே … Continued
கல்யாணப் பரிசு
– கிருஷ்ணன் நம்பி திருமண அழைப்பிதழை பார்த்ததும் தம்பதிகளுக்கு என்ன பரிசு தரலாம் என்று யோசிப்பதுதான் வழக்கம். ஆனால் ஒருவர் தன் திருமணத்திற்கு வருபவர்களுக்கு, ‘என்ன பரிசு தரலாம்?’ என்று யோசித்தார். திருமண ஏற்பாடுகளும் அதைப் பற்றிய இனிய நினைவுகளுமே வருபவர்களுக்கு பரிசாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து திருமண ஏற்பாட்டில் நிறைய புதுமைகள் … Continued
வெற்றி வெளிச்சம்
– இயகோகா சுப்பிரமணியம் இருளைத் தாண்ட உறவும் நட்பும் உதவும் -தொடர் தொழில், பணி, சேவை – இந்த மூன்றின் வெற்றிக்குமே அடிப்படையான ஒரு தேவை மனித உறவு. எல்லாரிடமும் நன்றாகப் பழக வேண்டும். இனிமையாகப் பேச வேண்டும் என்பது உறவு மேம்பாட்டுக்கான நல்வழி. ஆனால் தேவையான சிலரிடம் மட்டும் நல்ல முகத்தையும், இனிமையையும், பணிவையும் … Continued
உளிகள் நிறைந்த உலகமிது!
அறிமுகங்கள்! அனுபவங்கள்! ஆளுமைகள்!! – மரபின் மைந்தன் ம. முத்தையா உருவாக்கத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமை இருந்தால் போதாது என்பார் கணேஷ் பாலிகா. உருவானதை முன்வைப்பதிலும் அதே புதுமை அவசியம் என்று நினைப்பார். படைப்பாக முன்வைப்பு டழ்ங்ள்ங்ய்ற்ஹற்ண்ர்ய் என்பது. விளம்பர நிறுவனங்களைப் பொறுத்த வரை ஒரு பெரிய வைபவம். எனக்குத் தெரிந்து க்ளையண்ட்டின் இடத்திற்குப் போவதை விட … Continued
திருப்தி என்பது வளர்ச்சியைக் கெடுத்துவிடும்
நேர்காணல் -சோமவள்ளியப்பன் திரு. சோம. வள்ளியப்பன் பிரபல தன்முனைப்புப் பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர். மனிதவள மேம்பாட்டுத் துறையில் நாளும் புதுப்புது உத்திகளையும், வழிகாட்டுதல் களையும் பல்வேறு நிறுவனங்களுக்கும், தனி மனிதர்களுக்கும், குழுக்களுக்கும் வழங்குவதில் முன்னணியில் இருப்பவர். இன்று மிக அதிக அளவில் விற்பனையில் இருக்கும் சுயமுன்னேற்ற நூல்கள் பலவற்றின் ஆசிரியர்.
இன்று புதிதாய் பிறப்போம்
– ருக்மணி பன்னீர்செல்வம் பலமுறை பயன்படுத்தப்படும் இசைத்தட்டு எப்படியோ கீறல் விழுந்துவிடுகிறது. கீறல் விழுந்தபின்னர்தான் நீண்ட நாட்களாய் ஒன்றையே திரும்பப் திரும்பப் பயன் படுத்திக் கொண்டிருப்பதை நாம் உணர்கிறோம். பழமைகளை போற்றிப் புகழ்ந்துக் கொண்டிருப்பது நமது இயல்பு. அதில் தவறொன்றுமில்லை. புதுமையை நோக்கியும் நாம் பயணப் படுகின்றோம். ஆனால் பாதையின் துன்பங்களைக் கண்டதும் பாதிவழியிலே பலர் … Continued
அன்று இன்று
அவர் பெயர் கான்க்ஷா. 1910ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26ஆம் தேதி பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் குடும்பத்தில் மிகவும் இளையவர். இவர் தந்தை நிக்கோலா ஒரு காண்ட்ராக்டர். அரசியலில் மிகுந்த தீவிரத்தோடு பங்கு கொண்டிருந்தார். கான்க்ஷாவிற்கு 8 வயதாக இருந்தபோது இவர் தந்தை இறந்தார். அன்று முதல் கான்க்ஷாவையும் அவருடன் பிறந்த மற்ற இரண்டு … Continued