துளியும் தளராதே

– மரபின் மைந்தன் முத்தையா

துளியும் தளராதே!

மலிவு விலையில் மண்ணுலகெங்கும்
பகைவர்கள் கிடைப்பார்கள்!
மிகவும் விரைவாய் மனிதா உன்மேல்
பழிசொல்ல நினைப்பார்கள்!

தலைகுனியாமல் வாழ நினைத்தால்
தடைகள் படைப்பார்கள்!
தாண்டி வரும்வழி தெரிந்தவர்தானே
சரித்திரம் படைப்பார்கள்!

ஊரின் பழிச்சொல் ஒலிக்கட்டுமே உன்
உள்ளத்தைக் கேட்டுவிடு!
நேர்வழி நடப்பது உண்மையென்றால் – அதில்
உறுதிகள் காட்டிவிடு!
யாரோ சொல்வதை பாரம் சுமந்து
இதயம் நோகாதே!
நாளை உன்னை நாடே போற்றும்
துளியும் தளராதே!

ஆற்றின் போக்கை எதிர்த்துக் கொண்டு
மீன்கள் நீந்திவரும்!
காற்றின் போக்கை கிழித்துக் கொண்டு
பறவைகள் பாடிவரும்!
நேற்றின் போக்கை தாங்கியவர்க்கே
நாளை வெளிச்சம் வரும்!
வாழ்வின் போக்கை உணர்ந்தவர்தம்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *