நாளையென்ன தேடு?

-மரபின் மைந்தன் ம. முத்தையா

கோடையென்றும் குளுமையென்றும்

பருவநிலை மாறும்

வாடிநின்ற நிலைமையொரு

வீச்சினிலே தீரும்

தேடுவதை எட்டும்வரை

தொடர்ந்திருக்கும் பாடு

நாடியதை எட்டியபின்

நாளையென்ன? தேடு!

வீசுபுயல் நிலநடுக்கம்

வந்துபோகும் பூமி

ஏசுதலே இல்லாமல்

வாழ்ந்தவன்யார் காமி

தேசமெல்லாம் புகழ்ந்தாலும்

தீமைசெய்வான் ஒருவன்

கூசாமல் கடமை செய்யக்

கற்றவனே தலைவன்!

ஆயிரமாய் தடைகள்வரும்

ஆனபோதும் முயல்க

காயங்களை மறந்துவிட்டு

கருதியதை அடைக

நோய்மனது கொண்டவரின்

தொல்லைகளை மறந்து

வாய்ப்புகளைத் தொடர்ந்து சென்று

வெற்றிகளைப் பெறுக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *