எது என் பாதை

– பதினென் கவனகர் கனக சுப்புரத்தினம் ஆரம்பகாலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் வகுப்புகளில் நான் உற்சாகமாக பாடம் நடத்துவதையறிந்த எங்கள் பள்ளி நிர்வாகி, பள்ளி விழாவில், “நேருவைப் பற்றி பேச வேண்டும்” என்றார். மேடைப் பேச்சில் எனக்கு அனுபவம் இல்லையென்பதால் தயங்கியபடி, சரி என்றேன். விழா நாளும் வந்தது. என் பேச்சிற்கு மாணவர்கள் மத்தியில் பயங்கர … Continued

வீட்டிலேயே சம்மர் கேம்ப்

– கிருஷ்ண வரதராஜன் தந்திரா ஹாலிடே ஸ்கூலின் சென்னை சம்மர் கேம்பில் தன் குழந்தையை சேர்க்க வந்திருந்த ஒரு பெண்மணி கேட்டார், “கேம்ப் அரை நாள்தானா ஃபுல்டே கிடையாதா? இவங்கள வீட்டுல வைச்சு மேய்க்க முடியல?” ‘மேய்ப்பதற்கு குழந்தைகள் என்ன ஆடா? மாடா?’ பெற்றோர்களையும் குறைசொல்ல முடியாது. எக்ஸாம் முடிந்து லீவு விட்டால் தங்களை சுதந்திரப்பறவைகளாகத்தான் … Continued

உங்களை விளம்பரம் செய்யுங்கள்

– கிருஷ்ணன் நம்பி டிவியில் நீங்கள் ரசித்து பார்ப்பது நிகழ்ச்சிகளா? விளம்பரங்களா? நிச்சயம் விளம்பரங்கள்தான். விளம்பரங்கள், அதில் அறிமுகப்படுத்தப்படும் பொருளுக்காக ரசிக்கப்படுவதில்லை. விளம்பரப்படுத்தும் விதத்தில் உள்ள புதுமைக்காக ரசிக்கப்படுகிறது. அதுபோல உங்களைப்பற்றி நீங்கள் சொல்கிற விஷயம் மட்டுமல்ல, சொல்கிற விதமும் ரசிக்கப்படுவதாக இருக்க வேண்டும்.

நாம் வசிக்கிறோமா? வாழ்கிறோமா?

– ருக்மணி பன்னீர்செல்வம் தத்துவப் பேராசிரியர் ஒருவர் தன் வகுப்பிற்குள் நுழையும்போது சில பொருட் களையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தார். வகுப்பறை மேசையின் மேல் அப்பொருட்களை பரப்பி வைத்தார். வகுப்பு தொடங்கியவுடன் எதுவும் பேசாமல் ஒரு பெரிய குவளையை எடுத்து அதற்குள் கற்களைப் போட்டு நிரப்பினார். அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த மாணவர் களை நோக்கி, ‘இந்தக் குவளை … Continued

பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்

இந்த மாதம் கலைமாமணி நாஞ்சில் நாடன் அவர்களே எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கை இழப்பு தருணங்கள்தான் அதிகம். படிப்பு, வேலை தேடி போன காலங்கள் என அனைத்திலும் ஒரு இருண்மை சிந்தனை (டங்ள்ள்ண்ம்ண்ள்ற்ண்ஸ்ரீ ர்ன்ற்ப்ர்ர்ந்) தான் இருந்தது. ”நான் எல்லாம் எங்கே படிச்சு, வேலை பார்த்து, சம்பாதிச்சு” என்றெல்லாம் தோன்றும். ஆனால் எனக்கொரு தோல்வியோ, வருத்தமோ, ஏமாற்றமோ … Continued

தலைமுறை தொழிலதிபர்கள் தரும் பாடங்கள்

எல்லோரது மனதிலும் சாதாரணமாகவே ஒரு தொழிலதிபராக, எவரிடத்தும் பணிபுரியாமல் சுயமாகச் சம்பாதிப்பது தான் உண்மையான வெற்றி என்று ஒரு தவறான எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர்களைச் சாராமல், அடுத்தவர்களது துணை, உதவி இல்லாமல் யாராக இருந்தாலும் வெற்றி என்பது சாத்தியமல்ல. சொல்லப்போனால் உங்களது மனதில் நீங்கள் வெற்றியாளராக நினைத்து, ஓர் உந்துசக்தியாகக் கருதிக் கொண்டிருக்கும் மனிதர்கூட. … Continued

மாத்தி யோசி

-அத்வைத் சதானந்த் உங்கள் எதிரி யார்? நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். … Continued

உந்தி எழு உயரப் பற

– பேராசிரியர் பர்வீன் சுல்தானா உந்தி எழு; உயரப்பற என்கின்ற தலைப்பை நான் வித்தியாசமாக உணர்கிறேன். ஒன்று, நமக்குள் ஒரு சக்தி இருக்கின்றது. இரண்டாவது, நாம் அடைய வேண்டிய இலக்கு, நமக்கு முன்னால் இருக்கின்ற சாத்தியக் கூறுகள் என நான் இந்த தலைப்பிற்கு பொருள் கொண்டுள்ளேன். நம் வாழ்வில் மாற்றங்கள் நிகழாமல் எதுவுமே நடை பெறுவதில்லை. … Continued

விலங்குக்குள் மனிதம்

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் விலங்கினத்தில் இருந்து மனிதன் மாறுபட்டு இருப்பது, அவனது அறிவினால்தான். அந்த அறிவினால் பயன் ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? பிறருக்கு வரும் துன்பத்தினைத் தன் துன்பமாக எண்ணுவதுதான் அறிவின் உண்மை யான பயன் என்கிறான் வள்ளுவன். அப்படியொரு எண்ணம் தோன்றவில்லை என்றால், அறிவினால் விளையும் நன்மை வேறொன்றில்லை என்றும் கூறுகிறான். … Continued

உங்கள் பிள்ளைகள் அயல்நாடுகளில் படிக்க போகிறார்களா?

பயன்மிக்க பாதுகாப்பு டிப்ஸ் – பிரதாபன் அயல்நாட்டில் படிப்பு என்னும் அற்புத மான வாய்ப்பு உங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கப் போகிறதா? வாழ்த்துக்கள். பல இலட்சங்கள் செலவுசெய்து புதிய இடத்தில் படிக்கப்போகும் பிள்ளைகள் அதீத உற்சாகத்தில் வம்பை வரவழைத்துக் கொள்ளாமல் இருப்பதும் முக்கியமில்லையா? சர்வதேச கல்வியியல் நிபுணர்கள், புதிய சூழலில் மாணவ மாணவியர் பின்பற்றவேண்டிய சில பாதுகாப்பு … Continued