மரபின்மைந்தன் கவிதை

நேற்றின் கிழிசல்கள் தைப்பதற்கு
நாளொன்று மலர்ந்தது இன்றைக்கு
காற்றில் எழுதிய கனவுகளைக்
கைப்பற்றும் காலம் இன்றைக்கு

தள்ளிப் போட்டது போதாதோ
தயங்கி நின்றதும் போதாதோ
துள்ளி எழுந்துன் இலக்குகளைத்
தொட்டிட முனைந்தால் ஆகாதோ?

செந்தளிர்ப் பூக்களில் வண்டமர
ஜாதகம் எதுவும் பார்ப்பதில்லை
சிந்தையில் தெளிவுகள் இருக்கும்வரை
பாதகம் நிகழப் போவதில்லை

தீயெனச் சுடர்விடு துணிவோடு
தடைகள் சொல்லிட யாரிங்கு?
நீயாய்த் தடைகள் எழுப்பாதே
நினைத்ததை முடித்திடும் நாள் இன்று!

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *