பில்கேட்ஸ் தேவையா இது உங்களுக்கு..?

‘கம்டெக்ஸ்’ என்ற பெயரில் கம்ப்யூட்டர் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய பில்கேட்ஸ், ”கார் தயாரிக்கும் நிறுவனமாகிய ஜெனரல் மோட்டர்ஸ், கம்ப்யூட்டர் துறை போல் புதிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்திருந்தால், 25 டாலர்களுக்கு கார்கள் கிடைக்கும். ஒரு கேலன் டீசலுக்கு ஆயிரம் மைல்கள் ஓட்டலாம்” என்றாராம்.

ஒப்பிட்டுப் பார்க்க முடியாத தனித்துவம்

– இயகோகோ சுப்பிரமணியம் கடலின் ஆழமும், மனதின் உயரமும் அதனதன் நிலையில் சரிசமமே! பணத்தைக் கொண்டு வெற்றியை அளப்பது எந்த நிலையிலும் பெரும் தவறே! துரையைச் சேர்ந்த ஒருவர் அலுவலகத்தில் உங்களுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார். உங்களைப் பார்க்கவேண்டுமாம்’ என்ற செய்தியை நண்பர் ரங்கநாதன் தெரிவித்தார். அப்போதுதான் வியாபாரம்/ தொழில் இரண்டிலும் ஓராண்டைக் கடந்து எங்கள் சந்தையை … Continued

இந்த சுடர்களும் ஒளிரட்டுமே..!

உருகவைக்கும் உண்மை நிலை சில ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வரக்கூடியது தசைச்சிதைவு நோய். விருப்பமுடன் விளையாடும் போது விழுகிற குழந்தை அடிக்கடி விழுவதும், எழுவதற்கு சிரமப்படுவதும் ஆரம்ப அறிகுறிகள். உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாய் செயலிழந்து போக, கை கால்கள் மடங்கிக் கொள்ள, முடங்கிப் போகிற இந்த மலர்கள் சக்கர நாற்காலியில் காத்திருக்கின்றன… நிரந்தரமாய் குணமாக்கும் மருந்தொன்றை … Continued

நமக்குள்ளே

தலைவராக தகுதி உள்ளவர்கள் இன்று எப்படி இருக்க வேண்டும் என்று ரத்தினச்சுருக்கமாக அட்டைப்பட தலையங்கத்திற்கு கடைசிப்பக்கத்தில் விடை அளித்து விட்டார் அத்வைத் சதானந்த். ஆம் இப்ப எல்லோரும் தலைவராக தயாராக இருக்கோம். தங்கபரமேஸ்வரன், திட்டக்குடி. ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தரங்கமான நட்பாய் அன்றும் இன்றும் புத்தகங்களே இருக்கின்றன. நின்று, நிதானித்து, நெறிபட உரையாட புத்தகங்கள்போல் உற்ற துணை … Continued

நீங்கள் எந்த முறையில் கற்கிறீர்கள்?

– கிருஷ்ண வரதராஜன் மாணவர்கள் கற்கும் விதம் குறித்து உலகம் முழுவதும் ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டு அறிவிக்கப் பட்ட வழிமுறைகளில் குறிப்பிடத் தகுந்த முறை யஅஓ முறையாகும். மனிதர்கள் மூன்று விதமான வழிமுறைகளில் கற்றுக்கொள்கிறார்கள் என்பதோடு, எந்த முறையில் கற்பவர்கள் என்னென்ன வழி முறைகளை பின் பற்றினால் இன்னும் சிறப்பாக படிக்க முடியும் என்பதையும் இந்த … Continued

தலைவராக தயாராகுங்கள்

– அத்வைத் சதானந்த் கிருஷ்ணதேவராயர் அரண்மனை மாடத்தில் நின்றுகொண்டிருந்தார். அவருடன் இருந்த தேரோட்டி தயங்கித்தயங்கி கேட்டான், “தெனாலிராமனும் மற்ற மந்திரிகள் போலத் தானே அவருக்கு மட்டும் ஏன் அதிக முக்கியத் துவம் கொடுக்கிறீர்கள்?” ராமன்மேல் பலரும் பொறாமை கொண்டிருந்தனர். அவர்களில் தேரோட்டியும் ஒருவன் என்பது தெரிந்ததால் கிருஷ்ணதேவராயர் எதுவும் பேசாமல் தனக்குள் சிரித்துக்கொண்டார். தூரத்தில் சென்று … Continued

இருப்பதை உணர்வோம்

வழக்கறிஞர் த, இராமலிங்கம் தனக்குள்ளே ஆற்றல் இல்லாதவர் என்று ஒருவருமே இல்லை. எந்த ஒரு மனித படைப்பும் வீணான படைப்பு இல்லை. நாம் நம்முடைய பலவீனங்களை மிக பலமாகவும், பலத்தை மிக பலவீனமாகவும் பிடித்திருக்கிறோம். ‘இழக்கும்வரை நம்மிடம் இருப்பதன் அருமை நமக்குத் தெரிவதில்லை’ என்று பொதுவாக நாம் அனைவருமே பேசிக் கொள்கிறோம். ஒன்றின் முக்கியத்துவத்தை உணராமல், … Continued

என் குரல் எல்லோருக்கும் கேட்பதில்லை

– ரிஷபாருடன் மிஸ்டர் மனசாட்சியுடன் பரபரப்பு நேர்காணல் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற குழப்பத்திற்கு அடுத்தபடியான குபீர் குழப்பம், மனசாட்சி என்று ஒன்று உண்டா இல்லையா என்பதுதான். இருபத்தோராம் நூற்றாண்டின் அதிரடி தலைமுறைக்கு அறிமுகமாக வேண்டிய சுவாஸ்ரயமான மனிதர், மிஸ்டர் மனசாட்சி. பெரும்பாலும் தலைமறைவாய் இருப்பதையே விரும்புகின்ற இவர், வெற்றியாளர்களுக்கு வழிகாட்டி என்பது மட்டும் நிச்சயம். … Continued

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

மரபின் மைந்தன் ம. முத்தையா மனம் எனும் மாயக்கம்பளம் குழந்தைப் பருவத்தில் சொல்லப்படும் மிகப்பல கதைகளில் முக்கியமானது மாயக் கம்பளம். மனதில் ஓர் இடத்தை நினைத்தால் மறுவிநாடியே அங்கே கொண்டு போய் சேர்க்கக்கூடிய மாயக்கம்பளம் அந்தக் காலக் குழந்தைகள் மனதில் அடிக்கடி வந்து போகும். காலையில் கண்விழித்துப் பார்த்தால் படுக்கையில் இருப்பது தெரிய வந்து, பக்கத்தில் … Continued

பகிர்ந்து கொள்ளுங்கள் பகிரங்கமாக

– பிரதாபன் நிர்வாகவியல் நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜாக் வெல்க். நிறுவங்களின் வளர்ச்சிக்கான நடைமுறை வழிகளைப் ‘பளிச்’சென்று சொல்வதில் வல்லவர். செயல்படுத்தக்கூடிய சூத்திரங்கள் பலவற்றைத் தந்துள்ள அவரின் புகழ்பெற்ற வழிகாட்டுதல்களில் சில: 1.வெற்றிக்கு இருப்பது ஒரே வழி. அதுதான் நேர்வழி. உங்கள் நிறுவனத்தின் வழிமுறைகள் நேராக, நேர்மையாக அமையட்டும்.