தேர்தல் என்பது எதுவரை
காதலும் கல்யாணமும் எதுவரை என்பதற்கு கவியரசு கண்ணதாசன் கேள்வி பதிலாகவே ஒரு பாடல் எழுதியிருப்பார். “காதல் என்பது எதுவரை? கல்யாண காலம் வரும்வரை! கல்யாணம் என்பது எதுவரை? கழுத்தினில் தாலி விழும்வரை!” என்பது அந்தப் பாடல். கவிஞர் இன்று இருந்திருந்தால், “தேர்தல் என்பது எதுவரை” என்று புதிய பாடல் ஒன்றை இயற்றியிருப்பார். நடந்து முடிந்த தேர்தலில் … Continued
பொறுமையும் வேகமும்
– ருக்மணி பன்னீர் செல்வம் வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பிய இளைஞன் ஒருவன் சாக்ரடீசை சந்தித்தான். பணிந்து அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, “ஐயா தாங்கள் எனக்கு வெற்றியின் இரகசியத்தை தெரிவிக்க வேண்டும்” என்றான். அவன் கண்களை உற்று நோக்கிய சாக்ரடீஸ், “நாளை காலை என்னை ஆற்றங் கரையில் வந்து பார்” என்று சொல்லியனுப்பினார். சொன்னபடி மறுநாள் … Continued
வாழ நினைத்தால் வாழலாம்
மனநல நிபுணர் ருத்ரன் பதில்கள் ரமண மகரிஷி, புத்தர் போன்றவர்கள் ஞானமடைதல் பற்றிக்கூறுவதை புத்தகம் மூலமாக மட்டுமே தெரிந்து கொள்கிறோம். இதில் அறிவியலின் பங்கு என்ன? ராஜ்குமார், கோவை. இராமகிருஷ்ணர் மற்றும் ரமண மகரிஷியின் புத்தகங்களின் மூலமாகத்தான் அவர்களை அறிந்து கொள்கிறோம். இது ஒருபடி தான். காரல் மார்க்ஸினுடைய டாஸ் கேப்பிடலை படித்து முடித்து விட்டால் … Continued
இப்படியும் நடக்குது
குடியிருப்புப்பகுதியில் நாய் வளர்ப்பது வெகு சிரமம் என்று கருதியிருந்தோம். ஆனால் எங்கள் பொமரேனியன் நாய் டைகர், எங்கள் குடியிருப்பு முழுவதும் பிரபலமாகிவிட்டது. நம்மைத் தெரியாதவர்களுக்குக்கூட நம் நாயைத் தெரியும் என்பார் என் கணவர். ஒரு தடவை பொது விருந்தொன்றில் ஒருவரை எங்கள் உறவினர் அறிமுகம் செய்தார்.
எது என் பாதை
– பதினென் கவனகர் கனக சுப்புரத்தினம் ஆரம்பகாலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் வகுப்புகளில் நான் உற்சாகமாக பாடம் நடத்துவதையறிந்த எங்கள் பள்ளி நிர்வாகி, பள்ளி விழாவில், “நேருவைப் பற்றி பேச வேண்டும்” என்றார். மேடைப் பேச்சில் எனக்கு அனுபவம் இல்லையென்பதால் தயங்கியபடி, சரி என்றேன். விழா நாளும் வந்தது. என் பேச்சிற்கு மாணவர்கள் மத்தியில் பயங்கர … Continued
மார்க்கெட்டிங் மந்திரங்கள்
-சிநேக லதா வாய்ப்புகளின் வாசல் ரக்கு மாஸ்டரும் சப்ளையரும் சம்பந்தம் செய்த கதை உங்களுக்குத் தெரியுமா? சரக்கு மாஸ்டர் பெண்ணை யாருக்குக் கட்டி வைக்கலாம் என்று கேள்வி வந்தபோது, தான் பணிபுரியும் உணவகத்திலுள்ள சப்ளையருக்குத்தான் கல்யாணம் செய்துகொடுக்க வேண்டும் என சரக்கு மாஸ்டர் ஒற்றைக்காலில் நின்றாராம்.
திசைகளை திரும்பிப் பார்க்கிறேன்
– சிந்தனை கவிஞர் கவிதாசன் “நண்பர்கள் நம்மைப் பறக்க வைக்கிறார்கள்; வீழும் போதெல்லாம் தாங்கி நிற்கிறார்கள்” “எனக்குப் புனைபெயர் சூட்டுவதில் நண்பர்கள் தீவிரமாக இருந்தார்கள். பலரும் பல பெயர்களை முன்மொழிந்த நிலையில் “கவிதா” என்று புனைபெயர் இறுதியாக தேர்வானது. அதை நானும் ஏற்றுக் கொண்டு “கவிதா” என்ற புனைபெயரில் எழுதலாம் எனத் தீர்மானித்தேன். அப்பெயர் எனக்கு … Continued
வீட்டிலேயே சம்மர் கேம்ப்
– கிருஷ்ண வரதராஜன் தந்திரா ஹாலிடே ஸ்கூலின் சென்னை சம்மர் கேம்பில் தன் குழந்தையை சேர்க்க வந்திருந்த ஒரு பெண்மணி கேட்டார், “கேம்ப் அரை நாள்தானா ஃபுல்டே கிடையாதா? இவங்கள வீட்டுல வைச்சு மேய்க்க முடியல?” ‘மேய்ப்பதற்கு குழந்தைகள் என்ன ஆடா? மாடா?’ பெற்றோர்களையும் குறைசொல்ல முடியாது. எக்ஸாம் முடிந்து லீவு விட்டால் தங்களை சுதந்திரப்பறவைகளாகத்தான் … Continued
நமக்குள்ளே
ரிஷபாரூடன் அவர்கள் மிஸ்டர்.மனசாட்சியுடன் நடத்திய நேர்காணல் வெகு அருமை. தேர்ந்தெடுத்த கேள்விகள், தெளிவான பதில்கள் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் சந்தேகங்களை கையாண்ட விதம் அருமை. அரசியல் பற்றிய கேள்வியும் அதற்கான பதிலும் அற்புதம். டாக்டர் குமாரபாபு இலக்குகளை தீர்மானிக்கவும், இலக்குகளை அடைய நாம் செய்யவேண்டிய பயிற்சி பற்றியும் மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்.
கான்பிடன்ஸ் கார்னர் – 6
நல்லவனாக வாழ்வதில் பலருக்கும் நாட்டம் குறைந்துவிட்டதே, அப்படியானால் நல்ல இயல்புகளுக்கு மதிப்பு குறைந்துவிட்டதா என்று கேட்டான் மாணவன். ஆசிரியர் சொன்னார், ”இல்லை! நல்ல அம்சங்களின் மதிப்பு கூடிவிட்டது. அரிதாகக் கிடைக்கிறதங்கத்தை தேடி வாங்குவது போல் நல்ல குணங்களை நாடிப்போக வேண்டிய வர்கள் மனிதர்கள்தான்” என்று.