வாழ நினைத்தால் வாழலாம்!

ருத்ரன் பதில்கள் நான் நேர்மறையில் சிந்திக்கிறேன். என் மனைவி எதிர்மறையில் சிந்திக்கிறாள். எனக்கென்று ஓர் இலக்கு வைத்திருக்கிறேன். அவள் இலக்கில்லாமல் இருக்கிறாள். மனைவிக்கு இலக்கை எப்படி உருவாக்குவது? அவளை எப்படி நேர் மறையாக சிந்திக்க வைப்பது? இதையே அவர்கள் சொல்லலாம். இவையெல்லாம் அவரவருடைய கண்ணோட்டம்தான். திருமணமான ஆரம்ப நாட்களில் இந்த சிக்கல்கள் வருவதில்லை. குடும்ப கௌரவம், … Continued

உளிகள் நிறைந்த உலகமிது!

அறிமுகங்கள்! அனுபவங்கள்! ஆளுமைகள்! ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள். எழுதிய கையும் அப்படித்தான். விளம்பர எழுத்தாளராய் வாழ்வை நடத்துவது ஒரு வகையில் சுகமானது. ஒற்றைப் பொறி தட்டி ஒரு கருத்துரு தோன்றிவிட்டால் நல்ல பணம். சிரமமில்லாத வேலை. பிடி கிடைக்கும் வரை பிடிவாதமாக இருந்துவிட்டால் நிலைகொண்டு விடலாம். இந்த நம்பிக்கை ஆழமாக இருந்தது. … Continued

பொருளோடு வாழ்கிறீர்களா?

– ருக்மணி பன்னீர்செல்வம் இந்தக் கேள்வியானது இருபொருள்பட அமைந்ததுதான். உங்களுடைய வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாய், பொருள்பொதிந்ததாய் கட்டமைத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்பது ஒன்று. இன்றைய தேவை மட்டுமல்லாது எதிர் காலத்திற்கான தேவைகளுக்கும் பணத்தட்டுப்பாடு ஏற்படாதவண்ணம் முன்னேற்பாடுகள் செய்து வைத்து செல்வத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கி றீர்களா? என்பது மற்றொன்று.

உஷார் உள்ளேப்பார்

– சோம வள்ளியப்பன் வெற்றிக்கான, மகிழ்ச்சிக்கான பல்வேறு விஷயங்கள் நமக்கு உள்ளேயே இருக்கின்றன. அங்கே சரி செய்து கொண்டுவிட்டால் போதும். எல்லாம் சரியாக இருக்கும். உள்மன ஒழுங்கு, சிந்தனை நேர்த்தி, பார்வை மாற்றம் என்று எவ்வளவோ செய்யமுடியும். செய்தவர்கள் வென்றிருக்கிறார்கள். மனதின் மாபெரும் சக்தி பற்றியும் அது செய்யும் பல மாயங்கள் பற்றியும் உஷார் உள்ளே … Continued

மனமே உலகின் முதல் கணினி

ஒவ்வொரு சப்தத்திற்கும் தனித்துவம் உண்டு. ஒவ்வொரு சப்தத்திற்கும் அவசியமும் அர்த்தமும் உண்டு. ஒவ்வொரு சப்தமும், நமக்கும் மற்றவர்க்கும் இடையே ஒருவித தாக்கத்தை உருவாக்குவதும் உண்டு. சப்தங்கள் நமக்கும் மற்றவருக்கும் எப்போதும் ஏதோ ஒரு செய்தியை சொல்லியே செல்கிறது. இவை அனைத்தையும் நாம் விழிப்புடன் கேட்டிருக்கிறோமா?

அறிய வேண்டிய ஆளுமைகள்

மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞனுக்கு தான் ஏமாற்றப்படுகிறோம் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. தூத்துக்குடி பக்கமுள்ள நாகலாபுரம் என்ற கிராமம்தான் அந்த இளைஞனின் சொந்த ஊர். படிக்க வசதியில்லாமல் பத்தாம் வகுப்புடன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டு தங்கள் ஊர்க்கார இளைஞர்கள் பலரைப் போலவே சென்னையில் உள்ள தேநீர்க்கடைகளில் வேலை பார்க்க வந்த அந்த இளைஞனுக்கு … Continued

பூமியில் உலவிய புல்லாங்குழல்

– பிரதாபன் நபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றும் அவர் வழியே இறை வாசகங்கள் அருளப் பட்டன என்றும் இசுலாம் சொல்கிறது. கோடிக் கணக்கானவர்கள் பின்பற்றும் ஒரு மார்க்கத்தின் மறைநூலை வெளிப்படுத்தியவர் எழுதப் படிக்க அறியாதவர் என்பதில் முக்கியமான ஓர் அம்சம் இருக்கிறது. புல்லாங்குழல் இசையின் பிறப்பிடமாக இருப்பதற்குக் காரணமே அதிலுள்ள வெற்றிடம் தான். தன்னுள் … Continued

சான் கொங்சாங்

அக்குழந்தை பிறந்தது ஏப்ரல் 7, 1954இல். இவர் பெற்றோரான சார்லஸும், லீ லீ சானும் இவருக்கு வைத்த பெயர் “சான் கொங்சாங்”. சான் பிறக்கும்போது 12 கிலோ எடையுடன் பிறந்ததால், அறுவை சிகிச்சை செய்து வெளி யெடுக்கக்கூட பணமின்றி வறுமையில் வாடிய இக்குடும்பம் நண்பர்களின் உதவியோடு இவரை பெற்றெடுத்தனர். மிகுந்த வறுமையையும் புறம் தள்ளி, “சான்”னின் … Continued

உறவுகளின் உன்னதம்

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் புது வண்டி வாங்கும்போது, முதல் சில மாதங்களுக்கு அல்லது குறிப்பிட்ட சில கிலோ மீட்டர் தூரம் வண்டி ஓடும் வரை, அதற்கு இலவசச் சேவை உண்டு. வண்டி வாங்கும் எவரும், இந்த இலவசச் சேவைகளை இழப்பதில்லை. மிகச்சரியாக அதைப் பயன்படுத்தி, வண்டியின் பொறியினை யையும் மற்ற பாகங்களையும் சரி செய்து … Continued

உற்சாகமாக நடப்போம்

– இசைக்கவி ரமணன் ஆறுமனமே ஆறு! அந்த ஆண்டவன் கட்டளை ஆறு! ஆறு என்றால் வழி, அறுத்துச் செல்வது என்று ஆறு என்று, ஆற்றுப்படை பற்றிப் பேசும்போது விளக்குவார்கள். 1. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? புறநகர்ப் பகுதியில் ஒரு புதிய குடியிருப்பு. எனில், நீங்கள் தேடும் முகவரி ஒரு நீண்ட கட்டுரை போலத்தான் இருக்கும். ஃப்ளாட் … Continued